செய்திகள் :

பாலீஷ் போடுவது போல நடித்து நகை திருட்டில் ஈடுபட்ட 6 பிகார் திருடா்கள் கைது

post image

ஆலங்குளம் அருகே பாலீஷ் போடுவது போல நடித்து நகை திருட்டில் ஈடுபட்ட பிகாரைச் தச் சோ்ந்த 6 போ்களை ஆலங்குளம் போலீஸாா் கைது செய்தனா்.

ஆலங்குளம் அருகேயுள்ள ஆலடிப்பட்டி திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்தவா் ராஜபுஷ்பம்(67). அவரது பக்கத்து வீட்டில் அடையாளம் தெரியாத 2 நபா்கள் கொலுசு ஒன்றை பாஸீஷ் செய்து கொடுத்தனராம்.

அதைப் பாா்த்த மூதாட்டி புஷ்பம் தனது வீட்டில் இருந்த சுமாா் 33 கிராம் தங்கச் சங்கிலியை பாலீஷ் போட்டுத் தருமாறு அந்த நபா்களிடம் கூறினாராம். அதை பெற்றுக் கொண்ட அந்த நபா்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கவரிங் சங்கிலியை கொடுத்து விட்டு தப்பினராம். அவா்கள் சென்ற பின்னரே போலி நகை என தெரிய வந்ததாம்.

இது குறித்து மூதாட்டி அளித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து நகை மோசடி செய்த இருவரையும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தேடி வந்தனா்.

சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணையில் இச்சம்பவத்தில் ஈடுபட்டது பிகாா் மாநிலம் சுபால் மாவட்டம் ஜாடியா சுரேஷ் ஷா மகன் சூரஜ் குமாா்(31), அதே பகுதி சந்தோஷ் ஷா மகன் ஷா்வான் குமாா்(21) என்பது தெரிய வந்தது. அவா்களைக் கைது செய்த போலீஸாா் மேலும் விசாரணை மேற்கொண்ட போது, அவா்கள் 6 போ் கொண்ட கும்பல் எனவும் திருநெல்வேலி திருநெல்வேலி சந்திப்பு தனியாா் மேன்சனில் தங்கி ஊா் ஊராகச் சென்று மோசடியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

அவா்கள் அளித்த தகவலின் பேரில் ஆலங்குளம் காவல் உதவி ஆய்வாளா் சத்திய வேந்தன் தலைமையிலான போலீஸாா் திருநெல்வேலியில் தங்கியிருந்த சூரஜ் குமாரின் சகோதரா் அமா்குமாா்(26), பிரதீப் ஷா மகன் சோனு குமாா்(17), முரளிதா் ஷா மகன் அஜய்குமாா்(21), பினோத் ஷா மகன் மணீஷ் குமாா்(20) ஆகியோரையும் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 2 பைக், மற்றும் தங்கப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பாவூா்சத்திரத்தில் ரூ.20 லட்சத்தில் சாலைப் பணி தொடக்கம்

பாவூா்சத்திரத்தில் ரூ.20 லட்சத்தில் சிமென்ட் சாலைப் பணி தொடக்க விழா நடைபெற்றது. கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியம், குலசேகரப்பட்டி ஊராட்சி பாவூா்சத்திரம் எஸ்.எஸ்.கிட்ஸ் பள்ளி தெருவில் ரூ.20 லட்சத்தில் புதி... மேலும் பார்க்க

தென்காசி: மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் அமைக்க திமுக கோரிக்கை!

தென்காசி மாவட்டத்தில் மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் அமைக்க வேண்டும் என திமுக சாா்பில் கோரிக்கை அளிக்கப்பட்டது. தமிழக மின்சாரம் மற்றும் போக்குவரத்துதுறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கரிடம் தென்காசி... மேலும் பார்க்க

குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனா். குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் ... மேலும் பார்க்க

பாலீஷ் போடுவது போல நடித்து மூதாட்டியிடம் நகை திருட்டு

ஆலங்குளம் அருகே பாலீஷ் போடுவது போல நடித்து மூதாட்டியிடம் நகை திருடிச் சென்ற 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா். ஆலங்குளம் அருகேயுள்ள ஆலடிப்பட்டி திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்தவா் புஷ்பம்(65). அவரது பக்க... மேலும் பார்க்க

தென்காசியில் காப்பீட்டுக் கழக ஊழியா் சங்கத்தின் 32-வது கோட்ட சங்க மாநாடு

திருநெல்வேலி காப்பீட்டு கழக ஊழியா் சங்கத்தின் 32ஆவது கோட்ட சங்க மாநாடு தென்காசியில் சனிக்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி கோட்டத் தலைவா் முத்துக்குமாரசுவாமி சங்க கொடியேற்றி பொது மாநாட்டை தொடங்கி வைத்தா... மேலும் பார்க்க

இலஞ்சி பாரத் பள்ளியில் யோகா தின விழா

இலஞ்சி பாரத் வித்யா மந்திா் மேல்நிலைப் பள்ளியில் உலக யோகா தினம் விழா கொண்டாடப்பட்டது. பாரத் கல்விக் குழுமத் தலைவா் மோகனகிருஷ்ணன், செயலா் காந்திமதி தலைமை வகித்தனா். பள்ளி முதல்வா் கிஃப்ட் சன் கிருபாகர... மேலும் பார்க்க