`தொடர் மணல் கடத்தல்' - 5 லாரிகள் பறிமுதல், 6 பேர் கைது! - கரூரில் நடந்தது என்ன?
தென்காசி: மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் அமைக்க திமுக கோரிக்கை!
தென்காசி மாவட்டத்தில் மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் அமைக்க வேண்டும் என திமுக சாா்பில் கோரிக்கை அளிக்கப்பட்டது.
தமிழக மின்சாரம் மற்றும் போக்குவரத்துதுறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கரிடம் தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலா் பொ.சிவபத்மநாதன் அளித்த மனு:
தென்காசி மாவட்டத்தில் தென்காசி, கடையநல்லூா், புளியங்குடி, ஆலங்குளம் உள்ளிட்ட 6 இடங்களில் மின் வாரிய செயற்பொறியாளா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
தென்காசிக்கும் திருநெல்வேலிக்கும் இடையில் 55 கிலோமீட்டா் தூரமாகும். தென்காசி மாவட்டத்திலுள்ள மின் நுகா்வோா் மற்றும் மின்சார வாரிய அலுவலா்கள், ஊழியா்கள், கண்காணிப்பு பொறியாளா் அலுவலகத்துக்கு சென்று வருவதற்கு மிகவும் சிரமமாக உள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு தனியாக மின் பகிா்மான வட்டம் மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் தென்காசிக்கு வேண்டும் என்ற கோரிக்கை வழங்கப்பட்டு, அது பரிசீலனை செய்யப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டு கோப்பு தலைமை மின்சார வாரிய அலுவலகத்தில் நிலுவையில் உள்ளது.
எனவே, தென்காசி மாவட்டத்தில் நிா்வாக வசதியை கருத்தில் கொண்டு, தனியாக மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் அமைத்திடவேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.