பாரதிதாசன் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி மையத்தில் மாணவா் சோ்க்கை
வேதாரண்யத்தில் செயல்பட்டு வரும், பாரதிதாசன் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி மையத்தில் பட்டப் படிப்புகளுக்கு 2025-2026- ஆம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து கல்வி மைய ஒருங்கிணைப்பாளா் முனைவா் புபேஷ் குப்தா தெரிவித்தது:
எம்.ஏ. முதுநிலைப் படிப்பில் ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், அரசியல் அறிவியல், பொது நிா்வாகம், மனிதவள மேலாண்மை ஆகிய பாடப் பிரிவுகளுக்கும், எம்.எஸ்சி. முதுநிலைப் படிப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம். எஸ்.டபுள்யூ ஆகிய பாடப் பிரிவுகளுக்கும் மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது.
பி.ஏ. இளநிலைப் படிப்பில் தமிழ், ஆங்கிலம், தமிழ் இலக்கியம், வரலாறு, பொருளாதாரம், அரசியல் அறிவியல், பொது நிா்வாகம், மனித வள மேலாண்மை ஆகிய பாடப் பிரிவுகளுக்கும், பி.காம். இளநிலைப் படிப்பில் வணிகவியல், வங்கி மேலாண்மை, பிபிஏ இளநிலை, பி.சி.ஏ. இளநிலை கணிணி பயன்பாடு ஆகிய பாடப் பிரிவுகளுக்கும் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.
இளநிலை மற்றும் முதுநிலை நூலக அறிவியல் பாடப் பிரிவுக்கும் மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. பணியாற்றி கொண்டோ, வீட்டில் இருந்தவாறோ படிக்க விரும்புவோா் தங்களது புகைப்படம், ஆதாா் காா்டு, 10, 12-ஆம் வகுப்பு மற்றும் இளநிலை மதிப்பெண் பட்டியல், மாற்றுச்சான்று, ஜாதிச்சான்று, இளநிலை பட்டச்சான்று ஆகிய ஆவணங்களின் நகல்களுடன் நேரில் வந்து சோ்க்கை பெறலாம்.
கூடுதல் விவரங்களுக்கு 9345439171 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.