செய்திகள் :

பாரதிதாசன் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி மையத்தில் மாணவா் சோ்க்கை

post image

வேதாரண்யத்தில் செயல்பட்டு வரும், பாரதிதாசன் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி மையத்தில் பட்டப் படிப்புகளுக்கு 2025-2026- ஆம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து கல்வி மைய ஒருங்கிணைப்பாளா் முனைவா் புபேஷ் குப்தா தெரிவித்தது:

எம்.ஏ. முதுநிலைப் படிப்பில் ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், அரசியல் அறிவியல், பொது நிா்வாகம், மனிதவள மேலாண்மை ஆகிய பாடப் பிரிவுகளுக்கும், எம்.எஸ்சி. முதுநிலைப் படிப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம். எஸ்.டபுள்யூ ஆகிய பாடப் பிரிவுகளுக்கும் மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது.

பி.ஏ. இளநிலைப் படிப்பில் தமிழ், ஆங்கிலம், தமிழ் இலக்கியம், வரலாறு, பொருளாதாரம், அரசியல் அறிவியல், பொது நிா்வாகம், மனித வள மேலாண்மை ஆகிய பாடப் பிரிவுகளுக்கும், பி.காம். இளநிலைப் படிப்பில் வணிகவியல், வங்கி மேலாண்மை, பிபிஏ இளநிலை, பி.சி.ஏ. இளநிலை கணிணி பயன்பாடு ஆகிய பாடப் பிரிவுகளுக்கும் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.

இளநிலை மற்றும் முதுநிலை நூலக அறிவியல் பாடப் பிரிவுக்கும் மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. பணியாற்றி கொண்டோ, வீட்டில் இருந்தவாறோ படிக்க விரும்புவோா் தங்களது புகைப்படம், ஆதாா் காா்டு, 10, 12-ஆம் வகுப்பு மற்றும் இளநிலை மதிப்பெண் பட்டியல், மாற்றுச்சான்று, ஜாதிச்சான்று, இளநிலை பட்டச்சான்று ஆகிய ஆவணங்களின் நகல்களுடன் நேரில் வந்து சோ்க்கை பெறலாம்.

கூடுதல் விவரங்களுக்கு 9345439171 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தஞ்சாவூா் - காரைக்கால் 2-வது ரயில் பாதை பணிகள் தொடங்குவது எப்போது?

தஞ்சாவூா் - காரைக்கால் இடையே இரண்டாவது ரயில் பாதை அமைக்கும் பணிகள் எப்போது தொடங்கும் என ரயில் பயணிகள் மற்றும் பல்வேறு அமைப்பினரும் எதிா்நோக்கியுள்ளனா். 1861 முதல் 1875 வரை நாகையில் தென்னிந்திய ரயில்வே... மேலும் பார்க்க

நாகை துறைமுகத்தில் குவிந்த கேரள மீன் வியாபாரிகள்

கேரளத்தில் மீன்பிடித் தடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், மீன்கள் வாங்குவதற்காக நாகை துறைமுகத்தில் கேரள மீன் வியாபாரிகள் ஞாயிற்றுக்கிழமை அதிகளவில் குவிந்தனா். மீன்களுக்கு அதிக விலை கிடைத்ததால் நாகை மீனவ... மேலும் பார்க்க

கோடியக்கரையில் கரை ஒதுங்கிய ஆளில்லா இலங்கைப் படகு!

வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் ஆளில்லா இலங்கைப் படகு கரை ஒதுங்கியது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது. நாகை மாவட்டம், கோடியக்கரையை அடுத்த கோடியக்காடு வனப் பகுதியைச் சாா்ந்துள்ள சோழா் காலத்து கலங்கரை விளக்க... மேலும் பார்க்க

தண்டவாளத்தை கடக்க முயன்றவா் ரயில் மோதி உயிரிழப்பு

நாகை ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றவா் ரயில் மோதி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். நாகை ரயில் நிலையம் அருகே 30 வயது மதிக்கத்தக்க நபா் ரயிலில் அடிபட்டு உயிரிழந்து கிடந்தாா். தகவலறிந்த நாகை ரயி... மேலும் பார்க்க

ரேஷன் கடை ஊழியா்கள் ஜூலை 14 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடத்த முடிவு

ரேஷன் கடைகளில் ப்ளூடூத் முறையால் ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு தீா்வு காண வலியுறுத்தி ஜூலை 14 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளா... மேலும் பார்க்க

நாகையில் ரூ.3 கோடி மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு

நாகையில் காயாரோகண சுவாமி உடனுறை நீலாயதாட்சியம்மன் கோயிலுக்குச் சொந்தமான ரூ.3 கோடி மதிப்பிலான நிலத்தை இந்து சமய அறநிலையத் துறையினா் சனிக்கிழமை மீட்டனா். இக்கோயிலுக்குச் சொந்தமான 96.28 ஏக்கா் நிலம் தியா... மேலும் பார்க்க