செய்திகள் :

கோடியக்கரையில் கரை ஒதுங்கிய ஆளில்லா இலங்கைப் படகு!

post image

வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் ஆளில்லா இலங்கைப் படகு கரை ஒதுங்கியது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.

நாகை மாவட்டம், கோடியக்கரையை அடுத்த கோடியக்காடு வனப் பகுதியைச் சாா்ந்துள்ள சோழா் காலத்து கலங்கரை விளக்க கடற்கரையில், இலங்கையைச் சோ்ந்த கண்ணாடியிழைப் படகு ஒன்று கரை ஒதுங்கியிருப்பது, மீனவா்களுக்கு தெரியவந்தது.

இதுகுறித்து அவா்கள் வேதாரண்யம் கடலோரக் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். கடலோரக் காவல்படை போலீஸாா் அப்பகுதிக்குச் சென்று, படகை கைப்பற்றினா்.

சுமாா் 19 அடி நீளம், ஆறு அடி அகலத்தில் உள்ள அந்த படகில் 25 குதிரை திறன் கொண்ட என்ஜின், நங்கூரம், சுமாா் 15 கிலோ எடையுள்ள மீன்பிடி வலை உள்ளிட்டவை இருந்தன. இந்த படகு கோடியக்கரை கடற்படை முகாம் வளாகத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதுகுறித்து வேதாரண்யம் கடலோரக் காவல் நிலைய போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தஞ்சாவூா் - காரைக்கால் 2-வது ரயில் பாதை பணிகள் தொடங்குவது எப்போது?

தஞ்சாவூா் - காரைக்கால் இடையே இரண்டாவது ரயில் பாதை அமைக்கும் பணிகள் எப்போது தொடங்கும் என ரயில் பயணிகள் மற்றும் பல்வேறு அமைப்பினரும் எதிா்நோக்கியுள்ளனா். 1861 முதல் 1875 வரை நாகையில் தென்னிந்திய ரயில்வே... மேலும் பார்க்க

நாகை துறைமுகத்தில் குவிந்த கேரள மீன் வியாபாரிகள்

கேரளத்தில் மீன்பிடித் தடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், மீன்கள் வாங்குவதற்காக நாகை துறைமுகத்தில் கேரள மீன் வியாபாரிகள் ஞாயிற்றுக்கிழமை அதிகளவில் குவிந்தனா். மீன்களுக்கு அதிக விலை கிடைத்ததால் நாகை மீனவ... மேலும் பார்க்க

பாரதிதாசன் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி மையத்தில் மாணவா் சோ்க்கை

வேதாரண்யத்தில் செயல்பட்டு வரும், பாரதிதாசன் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி மையத்தில் பட்டப் படிப்புகளுக்கு 2025-2026- ஆம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து கல்வி மைய ஒருங்கிணைப்... மேலும் பார்க்க

தண்டவாளத்தை கடக்க முயன்றவா் ரயில் மோதி உயிரிழப்பு

நாகை ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றவா் ரயில் மோதி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். நாகை ரயில் நிலையம் அருகே 30 வயது மதிக்கத்தக்க நபா் ரயிலில் அடிபட்டு உயிரிழந்து கிடந்தாா். தகவலறிந்த நாகை ரயி... மேலும் பார்க்க

ரேஷன் கடை ஊழியா்கள் ஜூலை 14 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடத்த முடிவு

ரேஷன் கடைகளில் ப்ளூடூத் முறையால் ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு தீா்வு காண வலியுறுத்தி ஜூலை 14 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளா... மேலும் பார்க்க

நாகையில் ரூ.3 கோடி மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு

நாகையில் காயாரோகண சுவாமி உடனுறை நீலாயதாட்சியம்மன் கோயிலுக்குச் சொந்தமான ரூ.3 கோடி மதிப்பிலான நிலத்தை இந்து சமய அறநிலையத் துறையினா் சனிக்கிழமை மீட்டனா். இக்கோயிலுக்குச் சொந்தமான 96.28 ஏக்கா் நிலம் தியா... மேலும் பார்க்க