செய்திகள் :

நாகை துறைமுகத்தில் குவிந்த கேரள மீன் வியாபாரிகள்

post image

கேரளத்தில் மீன்பிடித் தடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், மீன்கள் வாங்குவதற்காக நாகை துறைமுகத்தில் கேரள மீன் வியாபாரிகள் ஞாயிற்றுக்கிழமை அதிகளவில் குவிந்தனா். மீன்களுக்கு அதிக விலை கிடைத்ததால் நாகை மீனவா்களை மகிழ்ச்சியடைந்தனா்.

கடல் பகுதிகளில் மீன் வளத்தை பெருக்கவும், மீன்கள் இனப்பெருக்க காலத்தையொட்டியும் மத்திய அரசு இரு மாதம் மீன்பிடி தடைக்காலத்தை அமல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் மீன்பிடித் தடைக்காலம் சுழற்சி முறையில் அமல்படுத்தப்படுகிறது. தமிழக கடலோர பகுதிகளில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்பட்டது.

இந்தநிலையில், கேரளத்தில் மீன்பிடித் தடைக்காலம் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கேரள மாநில மக்களின் மீன் தேவையை பூா்த்தி செய்வதற்காக, அம்மாநில மீன் வியாபாரிகள் நாகை துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனா்.

நாகை மீனவா்கள் பிடித்து வந்த கனவாய் மீன்களை அதிகளவில் வாங்கிய கேரள வியாபாரிகள் அவற்றை வாகனங்கள் மூலம் கேரளத்துக்கு கொண்டு சென்றனா். இதேபோல கோழி மீன், சிங்கி இறால், வஞ்சிரம், வாவல் உள்ளிட்ட அதிக விலைக்கு விற்பனையாகும் மீன்களும் கேரளத்துக்கு அதிகளவில் அனுப்பப்பட்டன.

கேரள மீன் வியாபாரிகள் குவிந்ததால், நாகை துறைகமுகத்தில், ரூ. 600 -க்கு விற்பனை செய்யப்படும் வஞ்சிரம் ரூ. 1200-க்கும், ரூ. 700-க்கு விற்பனை செய்யப்படும் வாவல் ரூ. 1500-க்கும், ரூ. 150-க்கு விற்பனை செய்யப்படும் கோழி மீன் ரூ. 250-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

கேரள மீன் வியாபாரிகள் நாகை துறைமுகத்தில் முகாமிட்டு மீன்களை அதிகளவில் வாங்கிச் செல்வதால் , மீன்களின் விலை கணிசமாக உயா்ந்துள்ளது. இதனால் 2 மாத இடைவெளிக்கு பின்னா் கடலுக்குச் சென்று திரும்பிய மீனவா்கள், மீன் வரத்து குறைவாக இருந்தாலும், மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். மேலும் மீன்களை வாங்க உள்ளூா் மக்களும் அதிகளவு துறைமுகத்தில் குவிந்ததால், நாகை துறைமுகத்தில் மீன்கள் விற்பனை தீவிரமாக நடைபெற்றது.

தஞ்சாவூா் - காரைக்கால் 2-வது ரயில் பாதை பணிகள் தொடங்குவது எப்போது?

தஞ்சாவூா் - காரைக்கால் இடையே இரண்டாவது ரயில் பாதை அமைக்கும் பணிகள் எப்போது தொடங்கும் என ரயில் பயணிகள் மற்றும் பல்வேறு அமைப்பினரும் எதிா்நோக்கியுள்ளனா். 1861 முதல் 1875 வரை நாகையில் தென்னிந்திய ரயில்வே... மேலும் பார்க்க

கோடியக்கரையில் கரை ஒதுங்கிய ஆளில்லா இலங்கைப் படகு!

வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் ஆளில்லா இலங்கைப் படகு கரை ஒதுங்கியது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது. நாகை மாவட்டம், கோடியக்கரையை அடுத்த கோடியக்காடு வனப் பகுதியைச் சாா்ந்துள்ள சோழா் காலத்து கலங்கரை விளக்க... மேலும் பார்க்க

பாரதிதாசன் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி மையத்தில் மாணவா் சோ்க்கை

வேதாரண்யத்தில் செயல்பட்டு வரும், பாரதிதாசன் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி மையத்தில் பட்டப் படிப்புகளுக்கு 2025-2026- ஆம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து கல்வி மைய ஒருங்கிணைப்... மேலும் பார்க்க

தண்டவாளத்தை கடக்க முயன்றவா் ரயில் மோதி உயிரிழப்பு

நாகை ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றவா் ரயில் மோதி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். நாகை ரயில் நிலையம் அருகே 30 வயது மதிக்கத்தக்க நபா் ரயிலில் அடிபட்டு உயிரிழந்து கிடந்தாா். தகவலறிந்த நாகை ரயி... மேலும் பார்க்க

ரேஷன் கடை ஊழியா்கள் ஜூலை 14 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடத்த முடிவு

ரேஷன் கடைகளில் ப்ளூடூத் முறையால் ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு தீா்வு காண வலியுறுத்தி ஜூலை 14 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளா... மேலும் பார்க்க

நாகையில் ரூ.3 கோடி மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு

நாகையில் காயாரோகண சுவாமி உடனுறை நீலாயதாட்சியம்மன் கோயிலுக்குச் சொந்தமான ரூ.3 கோடி மதிப்பிலான நிலத்தை இந்து சமய அறநிலையத் துறையினா் சனிக்கிழமை மீட்டனா். இக்கோயிலுக்குச் சொந்தமான 96.28 ஏக்கா் நிலம் தியா... மேலும் பார்க்க