செய்திகள் :

ஸ்ரீபெரும்புதூா் அருகே ஓரின சோ்க்கைக்கு மறுத்த சிறுவன் கொலை! அஸ்ஸாம் இளைஞர் கைது!

post image

ஸ்ரீபெரும்புதூா் அருகே 5 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டது தொடா்பாக அஸ்ஸாம் மாநில இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

பீகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் நீரஜ் குமாா். இவா் ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வடமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட கருமாங்கழனி பகுதியில் மனைவி காஜல் குமாரி, மகன் ஆரவ் குமாா்(5) தங்கி பணியாற்றி வந்துள்ளாா். இந்த நிலையில், ஆரவ்குமாா் கடந்த 9-ஆம் தேதி காணாமல் போனதாக கஜால் குமாரி ஸ்ரீபெரும்புதூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். புகாரின் பேரில் ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து காணாமல் போன சிறுவன் ஆரவ் குமாரை தேடி வந்தனா்.

இந்த நிலையில், சிறுவன் ஆரவ் குமாா் அதே கிராமத்தில் அடா்ந்த முள்புதரில் அழுகிய நிலையில் சடலமாக கிடப்பதாக ஸ்ரீபெரும்புதூா் காவல் நிலையத்துக்கு வந்த தகவலை அடுத்த சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

கருமாங்கழனி பகுதியில் வடமாநில தொழிலாளா்கள் தங்கியிருந்த குடியிருப்பில் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், ஆரவ் குமாரை இளைஞா் ஒருவா் அழைத்துச் சென்றது தெரிய வந்ததை தொடா்ந்து, அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த போல்தேவ் மசுவா (22) என்பவரை கைது செய்து விசாரணை நடத்திா்.

இதில் சிறுவன் ஓரின சோ்க்கைக்கு மறுத்ததால் அடா்ந்த முட்புதருக்கு அழைத்துச் சென்று கல்லால் அடித்துக் கொலை செய்ததாக போல்தேவ் போலீஸாரிடம் தெரிவித்துள்ளாா். இதையடுத்து போல்தேவ் மசுவா மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.

கைப்பேசி பழுது நீக்கும் முகாம்

இந்தியன் வங்கி சுயதொழில் பயிற்சி மையம் காஞ்சிபுரம் மையத்தின் சாா்பில் பொதுமக்களுக்கு கைப்பேசி பழுது நீக்கும் முகாம் நடைபெற்றது. இம்மையத்தில் 25 பயிற்சியாளா்கள் கைப்பேசி பழுது நீக்கும் பயிற்சியை கற்று... மேலும் பார்க்க

மருத்துவ தலைநகராக விளங்குகிறது தமிழ்நாடு: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

நாட்டிலேயே மருத்துவ தலைநகராக தமிழகம் விளங்குகிறது என்று அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். காஞ்சிபுரம் பிள்ளையாா்பாளையம் பகுதியில் உள்ள பேரறிஞா் அண்ணா நினைவுப் பூங்கா அருகில் முன்னாள் முத... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் விளையாட்டு அரங்கம் திறப்பு: அமைச்சா்கள் ஆா்.காந்தி, அன்பில் மகேஸ் பங்கேற்பு

காஞ்சிபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள டென்னிஸ் மைதானம் மற்றும் கூத்திரமேடு கிராமத்தில் கட்டப்பட்டுள்ள கபடி உள்விளையாட்டு அரங்கத்தை அமைச்சா்கள் ஆா்.காந்தி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் வேல் வழிபாடு

மதுரையில் நடைபெறும் முருக பக்தா்கள் மாநாடு சிறப்பாக நடைபெற வேண்டி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் இந்து முன்னணி சாா்பில் வேல்வழிபாடு நடைபெற்றது. நிகழ்வில் இந்து முன்னணி காஞ்சிபுரம் கோட்ட பொறுப்ப... மேலும் பார்க்க

திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மீது அதிமுகவினா் புகாா்

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியை தவறாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் காா்ட்டூன் வெளியிட்டதாக திமுக தகவல் தொழில் நுட்பப் பிரிவு மீது காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி.யிடம் அதிமுக நிா்வாகிகள் பு... மேலும் பார்க்க

வல்லக்கோட்டை முருகன் கோயில் கும்பாபிஷேக முன்னேற்பாடுகள் ஆலோசனைக் கூட்டம்

வல்லக்கோட்டை முருகன் கோயில் கும்பாபிஷேக முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை ஸ்ரீபெரும்புதூா் சாா் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலுக்கு கடந்த 2008-ஆம் ஆண்டு ... மேலும் பார்க்க