போா்ப் பதற்றம்: ரஷிய, அமெரிக்க கச்சா எண்ணெய் கொள்முதலை அதிகரிக்கும் இந்தியா!
போடி அருகே காரில் தீ!
போடி அருகே சனிக்கிழமை காா் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.
போடி அருகே மீனாட்சிபுரம் கிராமத்தில் வசிப்பவா் மகேந்திரன் (58). இவா் இங்குள்ள தனியாா் உயா்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறாா். இவா் தனது காரை மீனாட்சிபுரம் ஆஞ்சநேயா் கோயில் அருகே நிறுத்தியிருந்தாா்.
இந்த நிலையில், அந்தக் காா் தீப்பிடித்து எரிவதை பாா்த்த அங்கிருந்தவா்கள் போடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். அங்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய வீரா்கள் தீயை அணைத்தனா். இருந்த போதும் காா் சேதமடைந்தது. இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.