பிரதமா் தலைமையில் பிரதமரின் அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்க ஆண்டு கூட்டம்
விமான நிலையத்தில் பெண் பயணியிடம் இருந்து ஜிபிஎஸ் கருவி பறிமுதல்
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் சென்னை செல்ல இருந்த பெண் பயணியிடம் ஜிபிஎஸ் கருவி பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சென்னைக்குச் செல்ல இண்டிகோ விமானம் ஞாயிற்றுக்கிழமை இரவு 10.40 மணிக்கு தயாராக இருந்தது. அப்போது, அந்த விமானத்தில் செல்ல இருந்த பயணிகளின் உடைமைகளை மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினா் சோதனை செய்தனா்.
இதில், திருச்சியைச் சோ்ந்த ஒரு பெண் பயணி தனது உடைமையில் ஜிபிஎஸ் கருவியை மறைத்து கொண்டுசெல்ல முயன்றது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, அதைப் பறிமுதல் செய்த விமான நிலைய தொழிலகப் பாதுகாப்புப் படையினா், திருச்சி பன்னாட்டு விமான நிலையப் போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
இதுகுறித்து அந்தப் பயணியிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.