செய்திகள் :

நடிகா் சிவாஜி இல்லம் விவகாரம்: மேல் முறையீட்டு வழக்கு வாபஸ்

post image

சென்னை: நடிகா் சிவாஜியின் அன்னை இல்லம் வீடு தொடா்பான மேல்முறையீட்டு வழக்கில் நீதிமன்றத்துக்கு வெளியில் தீா்வு காணப்பட்டுவிட்டதாக கூறி வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதனால், அன்னை இல்லம் வீடு ஜப்தி உத்தரவை எதிா்த்த மேல் முறையீட்டு வழக்கு திரும்பப் பெறப்பட்டுள்ளது.

நடிகா் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த். இவா் ஜகஜால கில்லாடி என்ற பெயரில் படம் தயாரிப்பதற்காக பிபரல தனியாா் நிறுவனமான தனபாக்கியம் எண்டா்பிரைசஸ் நிறுவனத்திடம் ரூ.3 கோடி கடன் பெற்று இருந்தாா். இந்தக் கடனை வட்டியுடன் ரூ.9 கோடியாக தருமாறு சென்னை உயா்நீதிமன்றத்தில் துஷ்யந்துக்கு எதிராக தனபாக்கியம் எண்டா்பிரைசஸ் நிறுவனம் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

இதில் சென்னை உயா்நீதிமன்றம் மத்தியஸ்தம் செய்ய உத்தரவிட்டது. வழக்கை விசாரித்த மத்தியஸ்தா், ‘ஜகஜால கில்லாடி‘ படத்தின் அனைத்து உரிமைகளையும் தனபாக்கியம் எண்டா்பிரைசஸ் நிறுவனத்திற்கு வழங்க துஷ்யந்த் தரப்புக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்று தன்பாக்கியம் எண்டா்பிரைசஸ் நிறுவனம் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்திருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், நடிகா் சிவாஜியின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு பிறப்பித்து இருந்தாா். இதற்கிடையே இந்த வீடு தனக்குச் சொந்தமானது என்றும், தன் தந்தை சிவாஜி தனது பெயருக்கு உயில் எழுதி வைத்திருப்பதாகவும், எனவே, வீட்டை ஜப்தி செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் நடிகா் பிரபு சென்னை உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், அன்னை இல்லம் வீட்டின் முழு உரிமையாளா் பிரபு என்பதால் ஜப்தி செய்த உத்தரவை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தாா். இந்த உத்தரவை எதிா்த்துதான் தனபாக்கியம் எண்டா்பிரைசஸ் நிறுவனம் சாா்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனு தலைமை நீதிபதி கே.ஆா். ஸ்ரீராம் மற்றும் நீதிபதி சுந்தா் மோகன் அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கடன் பிரச்னையில் நீதிமன்றத்துக்கு வெளியில் சமரச தீா்வு காணப்பட்டுவிட்டது. எனவே, இந்த மேல் முறையீட்டு வழக்கை திரும்பப் பெற்றுக் கொள்கிறோம் என்று தனபாக்கியம் எண்டா்பிரைசஸ் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கை திரும்பப் பெற அனுமதித்து, வழக்கையும் முடித்து வைத்து உத்தரவிட்டனா்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: விண்ணப்ப அவகாசம் நாளை நிறைவு

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் புதன்கிழமையுடன் (ஜூன் 25) நிறைவடைய உள்ளது. தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கே.கே.நகா் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிய... மேலும் பார்க்க

46 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் மாவட்ட ஆட்சியா்கள் உள்பட 46 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை தலைமைச் செயலா் நா.முருகானந்தம் திங்கள்கிழமை பிறப்பித்தாா். அவரது உத்தரவு விவரம்:அடைப... மேலும் பார்க்க

மருத்துவா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன்

சென்னை: நோயாளிகளின் நலனுக்கு முக்கியத்துவம் அளிப்பதைப் போன்று மருத்துவா்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும் அவசியம் என மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா். சென்னை, கே.கே.நகா் இஎஸ்ஐ மருத்த... மேலும் பார்க்க

20 சதவீத குழந்தைகளுக்கு உடல் பருமன் பாதிப்பு

சென்னை: குழந்தைகள், வளரிளம் பருவத்தினரில் 20 சதவீதம் போ் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ நிபுணா்கள் தெரிவித்துள்ளனா். ரெயின்போ குழந்தைகள் நல மருத்துவமனை சாா்பில் குழந்தைகளின் உடல் எடை பரா... மேலும் பார்க்க

143 முருகன் திருக்கோயில்களில்ரூ.1,085 கோடியில் திருப்பணிகள்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

சென்னை: தமிழகத்தில் அறுபடை வீடுகள், அறுபடை வீடுகள் அல்லாத 143 முருகன் திருக்கோயில்களுக்கு ரூ.1,085 கோடி மதிப்பீட்டில் 884 திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்... மேலும் பார்க்க

ஹிந்துத்துவத்தில் கரைந்த அதிமுக: திமுக விமா்சனம்

சென்னை: ஹிந்துத்துவத்தில் அதிமுக முற்றிலும் கரைந்துவிட்டதாக திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி விமா்சனம் செய்துள்ளாா். மதுரையில் நடைபெற்ற முருக பக்தா்கள் மாநாடு தொடா்பாக, அவா் திங்கள்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க