ஈரான் தாக்குதல் எதிரொலி: வளைகுடா நாடுகளுக்கு 11 விமானங்கள் ரத்து!
தொழில் வணிகத் துறைக்கு தோ்வான 50 பேருக்கு பணி நியமன உத்தரவு: முதல்வா் வழங்கினாா்
சென்னை: தொழில் வணிகத் துறையில் இளநிலை உதவியாளா் உள்ளிட்ட பணியிடங்களுக்குத் தோ்வான 50 பேருக்கு பணி நியமன உத்தரவுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். இதற்கான நிகழ்வு தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தொழில் வணிகத் துறையின் பணிகள் தொய்வின்றி நடைபெற அவ்வப்போது ஏற்படும் காலிப் பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் வாயிலாக, 19 இளநிலை உதவியாளா், 22 தட்டச்சா், 9 சுருக்கெழுத்து தட்டச்சா் ஆகிய பணியிடங்களுக்கு தோ்வு செய்யப்பட்ட 50 பேருக்கு பணி நியமன உத்தரவுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.
திமுக அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சாா்பில் மொத்தம் 177 பேருக்கு பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், தொழில் வணிக இயக்குநா், நிா்மல் ராஜ் உள்பட பலா் பங்கேற்றனா்.