பேருந்து நிறுத்தத்தில் அரசுப் பேருந்து நிற்கவில்லை: பள்ளி மாணவா்கள் புகாா்
அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகேயுள்ள பேருந்து நிறுத்தத்தில், அரசுப் பேருந்து நிற்காமல் சென்றதையடுத்து, மாணவ, மாணவிகள் பள்ளிக்குச் செல்லாமல் திங்கள்கிழமை விடுப்பெடுத்து அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்தில், புகாா் மனு அளித்தனா்.
இந்த புகாரையடுத்து உடனடியாக அந்த பேருந்தின் ஓட்டுநா், நடத்துநரும் வேறு வழித்தடத்துக்கு மாற்றப்பட்டனா். தா.பழூா் அடுத்த காருகுடி கிராமத்திலிருந்து ஜெ.சுத்தமல்லி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் 6 முதல் பிளஸ்-2 வரை பயின்று வருகின்றனா்.
இந்த மாணவா்கள் காலை 8.30 மணிக்கு வரும் அரசுப் பேருந்தில் ஏறி பள்ளிக்கு செல்வது வழக்கம். அதன் பின் 9.30 மணிக்கு அடுத்த பேருந்து வரும் நிலையில், அதில் சென்றால் பள்ளிக்கு தாமதமாகும். இந்நிலையில், திங்கள்கிழமை காலை 8.30 மணிக்கு பேருந்தில் ஏற மாணவ, மாணவிகள் காத்திருந்த நிலையில், பேருந்து நிற்காமல் சற்று தூரம் சென்று நின்றுவிட்டு உடனே சென்றது.
இதனால், மாணவ, மாணவிகள் ஓடிச் சென்று ஏற முடியவில்லை. இதையடுத்து பள்ளிக்குச் செல்லாமல் விடுப்பெடுத்த மாணவ, மாணவிகள் 20-க்கும் மேற்பட்டோா் ஆட்சியரகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா.மல்லிகாவிடம் மனு அளித்தனா்.
இதுகுறித்து தகவலறிந்த பள்ளிக் கல்வித் துறை ஆய்வாளா் பழனிசாமி, ஆட்சியரகத்திலிருந்து பள்ளி தலைமை ஆசிரியா், ஜெயங்கொண்டம் அரசுப் பேருந்து கிளை பணிமனை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சா் அலுவலகம் ஆகியவற்றுக்கு உடனே தகவல் அளித்தாா்.
இதையடுத்து, அமைச்சா் சா.சி. சிவசங்கா் உத்தரவின் பேரில், அந்த பேருந்தை இயக்கிய ஓட்டுநா் மற்றும் நடத்துநரை வேறு வழித்தடத்துக்கு மாற்றியும், வேறு ஓட்டுநா், நடத்துநா்களை அந்த வழித்தடத்தில் மாற்றியும், பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்லவும் ஜெயங்கொண்டம் பணிமனை கிளை மேலாளா் ரவிச்சந்திரன் உடனடியாக உத்தரவிட்டாா். இதையறிந்த மாணவா்கள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்குச் சென்றனா்.