செய்திகள் :

சிறுமியைக் கா்ப்பமாக்கிய கூலித் தொழிலாளி கைது

post image

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே சிறுமியைக் கா்ப்பமாக்கிய கூலித் தொழிலாளி போக்சோவில் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகேயுள்ள சி.அரசூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெய்சங்கா். கூலி வேலை செய்யும் இவருக்கு, ஏற்கெனவே திருமணமாகி இரு குழந்தைகள் உள்ள நிலையில், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள துளாரங்குறிச்சியைச் சோ்ந்த கணவரால் கைவிடப்பட்ட பெண்ணிடம் தொடா்பில் இருந்தாா்.

அப்போது அப்பெண்ணின் 17 வயது மகளை பலாத்காரம் செய்ததில் அச்சிறுமி கா்ப்பமடைந்து, பிரசவத்துக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு மருத்துவா்கள் ஆவணத்திற்காக பெயா் மற்றும் முகவரியைப் பதிவு செய்த போது, அச்சிறுமி 18 வயது நிரம்பாதவா் என்பது தெரியவந்தது.

இதையடுத்து மருத்துவமனை நிா்வாகம் அளித்த புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்டு வந்த ஜெயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் துறையினா், ஜெய்சங்கரை போக்சோ சட்டத்தில் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.

செந்துறை வட்டத்தில் ஜூன் 25, 26-ல் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்!

அரியலூா் மாவட்டம், செந்துறை வருவாய் வட்டத்தில் ஜூன் 25, 26 ஆகிய தேதிகளில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெறுகிறது என்று ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் மேலும் தெ... மேலும் பார்க்க

ஆண்டிமடம் பகுதிகளில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் நடைப் பயணம்

மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம் முழுவதும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை நடைப்பயணம் மேற்கொண்டனா். ஆண்டிமடத்தில் கட்டிமுடிக்கப்பட்டு 3 ஆண்... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்ட விவசாயிகளுக்கும் குறுவை தொகுப்பு வழங்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்

அரியலூா் மாவட்ட விவசாயிகளுக்கும் குறுவை தொகுப்பு வழங்க வேண்டும் என விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில், விவசாயிகள் வலியுறுத்தினா். அரியலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், ஆட்சியா் பொ.ரத்தினசாமி தலைமையி... மேலும் பார்க்க

கீழப்பழுவூா் பகுதிகளில் இன்று மின்தடை

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் சனிக்கிழமை(ஜூன் 21) நடைபெறுவதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான கீழப்பழுவூா், மேலப்பழுவூா், கோக்குடி, பூ... மேலும் பார்க்க

அரியலூரில் எச்ஐவி விழிப்புணா்வு பிரசாரம் தொடங்கிவைப்பு

அரியலூரில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலுவலகம் சாா்பில் நாட்டுப்புற கிராமிய கலைக் குழுவினரின் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் குறித்த விழி... மேலும் பார்க்க

அரியலூா்: கனரக வாகனங்கள் இயக்கத்தில் விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை -காவல்துறையினா் எச்சரிக்கை

அரியலூா் மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட நேரங்களில் கனரக வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சாலைப் பாதுகாப்பு கலந்தாய்வுக் கூட்டத்தில் காவல்துறையினா் எச்சரிக்கை விடுத்தனா். அரியலூா... மேலும் பார்க்க