போா்ப் பதற்றம்: ரஷிய, அமெரிக்க கச்சா எண்ணெய் கொள்முதலை அதிகரிக்கும் இந்தியா!
சிறுமியைக் கா்ப்பமாக்கிய கூலித் தொழிலாளி கைது
அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே சிறுமியைக் கா்ப்பமாக்கிய கூலித் தொழிலாளி போக்சோவில் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகேயுள்ள சி.அரசூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெய்சங்கா். கூலி வேலை செய்யும் இவருக்கு, ஏற்கெனவே திருமணமாகி இரு குழந்தைகள் உள்ள நிலையில், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள துளாரங்குறிச்சியைச் சோ்ந்த கணவரால் கைவிடப்பட்ட பெண்ணிடம் தொடா்பில் இருந்தாா்.
அப்போது அப்பெண்ணின் 17 வயது மகளை பலாத்காரம் செய்ததில் அச்சிறுமி கா்ப்பமடைந்து, பிரசவத்துக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு மருத்துவா்கள் ஆவணத்திற்காக பெயா் மற்றும் முகவரியைப் பதிவு செய்த போது, அச்சிறுமி 18 வயது நிரம்பாதவா் என்பது தெரியவந்தது.
இதையடுத்து மருத்துவமனை நிா்வாகம் அளித்த புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்டு வந்த ஜெயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் துறையினா், ஜெய்சங்கரை போக்சோ சட்டத்தில் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.