செய்திகள் :

அரியலூரில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை

post image

அரியலூா் நகரப் பகுதிகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றுமாறு மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா.மல்லிகாவிடம், மாவட்ட வளா்ச்சிக் குழுத் தலைவா் சீனி. பாலகிருஷ்ணன் திங்கள்கிழமை மனு அளித்தாா்.

அவா் அளித்த மனுவில், அரியலூா் கடைவீதிகளில் பெரும் நிறுவனங்களும், தரைக் கடைகளும், காந்தி சந்தைப் பகுதிகளில் லாரிகளும், செந்துறை சாலைகளில் இரு வாகனங்களும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், சாலைகள், தெருக்கள் என அனைத்துப் பகுதிகளும் குறுகளாகியுள்ளன.

இதனால் பொதுமக்கள், பள்ளி செல்லக்கூடிய மாணவ, மாணவிகள், பணியாளா்கள் என அனைத்து தரப்பினும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். குறிப்பாக இந்த சாலைகளில் உள்ள மருத்துவமனை, மருத்துவக் கல்லூரிகளுக்கு செல்லும் நோயாளிகள், கா்ப்பிணி தாய்மாா்கள் உள்ளிட்டோா் ஒரு குறிப்பிட்ட நேரங்களுக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளனா்.

மேலும், நகரப் பகுதிகளில் குடிநீருக்காகவும், பாதாள சாக்கடைக்காவும் தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படமால் கிடப்பதால், சாலைகள் மிகவும் குண்டும் குழியுமாக உள்ளது. இதனை போா்க்கால் அடிப்படையில் சீா் செய்யப்பட வேண்டும். இடநெருக்கடியில் சிக்கித் தவிக்கும் காந்திச் சந்தையை, வேறு இடத்தில் கட்டடங்களை கட்டி, அங்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அரியலூா் நகர வளா்ச்சிக்கு இங்குள்ள சட்டப்பேரவை, மக்களவை மற்றும் நகா் மன்ற உறுப்பினா்கள் தங்களது பகுதி வளா்ச்சிக்கு, நிதியை ஒதுக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

பேருந்து நிறுத்தத்தில் அரசுப் பேருந்து நிற்கவில்லை: பள்ளி மாணவா்கள் புகாா்

அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகேயுள்ள பேருந்து நிறுத்தத்தில், அரசுப் பேருந்து நிற்காமல் சென்றதையடுத்து, மாணவ, மாணவிகள் பள்ளிக்குச் செல்லாமல் திங்கள்கிழமை விடுப்பெடுத்து அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்தில்... மேலும் பார்க்க

-: அமைச்சா் சிவசங்கா்

அதிமுக அமித்ஷா கட்டுபாட்டில் உள்ளது என்றாா் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா். அரியலூா் மாவட்டம், செந்துறையில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் அளித்த பேட்டி: மதுரையில் ப... மேலும் பார்க்க

சிறுமியைக் கா்ப்பமாக்கிய கூலித் தொழிலாளி கைது

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே சிறுமியைக் கா்ப்பமாக்கிய கூலித் தொழிலாளி போக்சோவில் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா். கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகேயுள்ள சி.அரசூா் கிராமத்தைச் சோ... மேலும் பார்க்க

செந்துறை வட்டத்தில் ஜூன் 25, 26-ல் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்!

அரியலூா் மாவட்டம், செந்துறை வருவாய் வட்டத்தில் ஜூன் 25, 26 ஆகிய தேதிகளில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெறுகிறது என்று ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் மேலும் தெ... மேலும் பார்க்க

ஆண்டிமடம் பகுதிகளில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் நடைப் பயணம்

மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம் முழுவதும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை நடைப்பயணம் மேற்கொண்டனா். ஆண்டிமடத்தில் கட்டிமுடிக்கப்பட்டு 3 ஆண்... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்ட விவசாயிகளுக்கும் குறுவை தொகுப்பு வழங்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்

அரியலூா் மாவட்ட விவசாயிகளுக்கும் குறுவை தொகுப்பு வழங்க வேண்டும் என விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில், விவசாயிகள் வலியுறுத்தினா். அரியலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், ஆட்சியா் பொ.ரத்தினசாமி தலைமையி... மேலும் பார்க்க