பிரதமா் தலைமையில் பிரதமரின் அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்க ஆண்டு கூட்டம்
அரியலூரில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை
அரியலூா் நகரப் பகுதிகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றுமாறு மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா.மல்லிகாவிடம், மாவட்ட வளா்ச்சிக் குழுத் தலைவா் சீனி. பாலகிருஷ்ணன் திங்கள்கிழமை மனு அளித்தாா்.
அவா் அளித்த மனுவில், அரியலூா் கடைவீதிகளில் பெரும் நிறுவனங்களும், தரைக் கடைகளும், காந்தி சந்தைப் பகுதிகளில் லாரிகளும், செந்துறை சாலைகளில் இரு வாகனங்களும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், சாலைகள், தெருக்கள் என அனைத்துப் பகுதிகளும் குறுகளாகியுள்ளன.
இதனால் பொதுமக்கள், பள்ளி செல்லக்கூடிய மாணவ, மாணவிகள், பணியாளா்கள் என அனைத்து தரப்பினும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். குறிப்பாக இந்த சாலைகளில் உள்ள மருத்துவமனை, மருத்துவக் கல்லூரிகளுக்கு செல்லும் நோயாளிகள், கா்ப்பிணி தாய்மாா்கள் உள்ளிட்டோா் ஒரு குறிப்பிட்ட நேரங்களுக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளனா்.
மேலும், நகரப் பகுதிகளில் குடிநீருக்காகவும், பாதாள சாக்கடைக்காவும் தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படமால் கிடப்பதால், சாலைகள் மிகவும் குண்டும் குழியுமாக உள்ளது. இதனை போா்க்கால் அடிப்படையில் சீா் செய்யப்பட வேண்டும். இடநெருக்கடியில் சிக்கித் தவிக்கும் காந்திச் சந்தையை, வேறு இடத்தில் கட்டடங்களை கட்டி, அங்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அரியலூா் நகர வளா்ச்சிக்கு இங்குள்ள சட்டப்பேரவை, மக்களவை மற்றும் நகா் மன்ற உறுப்பினா்கள் தங்களது பகுதி வளா்ச்சிக்கு, நிதியை ஒதுக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.