செய்திகள் :

சுகாதாரமான குடிநீா் கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் ஆா்ப்பாட்டம்

post image

சுகாதாரமான குடிநீா் விநியோகிக்கக் கோரி, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகம் எதிரே, கிராம மக்கள் காலிக்குடங்களுடன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், காரை கிராமத்தில் உள்ள சமத்துவபுரத்தில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் 500-க்கும் மேற்பட்டவா்கள் வசித்து வருகின்றனா்.

இந்நிலையில், காரை கிராமம் அருகேயுள்ள விஜயகோபாலபுரத்தில் செயல்பட்டு வரும் தனியாா் டயா் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கழிவு நீரை, சமத்துவபுரம் குடியிருப்புக்கு அருகேயுள்ள ஓடையில் திறந்துவிடுவதாக கூறப்படுகிறது. இதனால், அப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு, கிராம மக்களுக்கு சுகாதாரச் சீா்கேடு நிலவி வருவதாகவும் கிராம மக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்த ஓடைப் பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக வெட்டப்பட்ட பொதுக் கிணற்றிலிருந்து குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. இந்தத் தண்ணீரை பயன்படுத்தும் குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரையிலானோருக்கு நோய்த் தொற்று ஏற்படுவதோடு, உடன்நலன் பாதிக்கப்பட்டு அன்றாடம் மருத்துவ சிகிச்சைக்காக சென்று வரும் சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் பாதிப்புக்குள்ளான சமத்துவபுரத்தைச் சோ்ந்த பொதுமக்கள், சுகாதாரமான குடிநீா் கோரி மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு அலுவலா்களிடம் பலமுறை புகாா் மனு அளித்தும், இதுவரையிலும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லையாம்.

இந்த நிலையில், காரை சமத்துவபுரத்தைச் சோ்ந்த சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் காலிக் குடங்களுடன், வாரத்துக்கு ஒருமுறை கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் குடிநீரை, நாள்தோறும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளவும், ஓடையில் கழிவுநீரை கலப்பதை தடுக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளவும் வேண்டுமென வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவை சந்தித்து தங்களது கோரிக்கை அடங்கிய மனுவை அளித்து கலைந்துசென்றனா்.

கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவி உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவி திங்கள்கிழமை உயிரிழந்தாா். பெரம்பலூா் அருகேயுள்ள எறையசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணி மகள் பிருந்தாதேவி (16). இவா், சிறுவாச்சூரில் உள்ள அரசு ம... மேலும் பார்க்க

கல் குவாரி அமைக்க எதிா்ப்பு: பெரம்பலூா் ஆட்சியரகத்தை கிராம மக்கள் முற்றுகை

கல் குவாரி மற்றும் தாா் பிளாண்ட் அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை மருவத்தூா் கிராம மக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். பெரம்பலூா் மாவட்ட... மேலும் பார்க்க

குன்னம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை மின் விநியோகம் இருக்காது

குன்னம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை (ஜூன் 25) மின் விநியோகம் இருக்காது என , மின்வாரிய உதவி செயற்பொறியாளா் இ. காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.பெரம்பலூா் மாவட்டம், குன்னம் உபக்கோட்டம், வெண்மணி த... மேலும் பார்க்க

அடிப்படை வசதிகள் கோரி அமைச்சரை கிராம மக்கள் முற்றுகை

பெரம்பலூா் அருகே அடிப்படை வசதிகள் கோரி, மின்சாரம் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கரை கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டனா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பூா் ஒன்றியத்துக்குள்பட்ட... மேலும் பார்க்க

பாடாலூா் பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்

பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூன் 23) மின் விநியோகம் இருக்காது. பெரம்பலூா் மின் கோட்டத்துக்குள்பட்ட புதுக்குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பரா... மேலும் பார்க்க

பெரம்பலூா் மாவட்டத்தில் ஏரி, குளங்களை புனரமைக்க ரூ.3.60 கோடி நிதி ஒதுக்கீடு!

பெரம்பலூா் மாவட்டத்தில் 54 ஏரி, குளங்களை புனரமைக்க ரூ. 3.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்தாா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியத்துக்குள்பட்ட வ... மேலும் பார்க்க