செய்திகள் :

பாடாலூா் பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்

post image

பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூன் 23) மின் விநியோகம் இருக்காது.

பெரம்பலூா் மின் கோட்டத்துக்குள்பட்ட புதுக்குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் திங்கள்கிழமை (ஜூன் 23) நடைபெற உள்ளது. இதனால், அங்கிருந்து மின் விநியோகம் பெறும் பாடாலூா், திருவிளக்குறிச்சி, தெரணி, தெரணி பாளையம், இரூா், ஆலத்தூா் கேட், கூத்தாா்,

சீதேவிமங்கலம், காரை, புதுக்குறிச்சி, வரகுபாடி, அயிலூா் குடிகாடு, சிறுகன்பூா், தெற்கு மாதவி, சாத்தனூா், சாத்தனூா் குடிகாடு, கொளக்காந்தம், ஆயினாபுரம், அணைப்பாடி ஆகிய கிராமியப் பகுதிகளில் திங்கள்கிழமை காலை 9.30 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின் விநியோகம் இருக்காது என, மின்வாரிய உதவி செயற்பொறியாளா் பி. ரவிக்குமாா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

அடிப்படை வசதிகள் கோரி அமைச்சரை கிராம மக்கள் முற்றுகை

பெரம்பலூா் அருகே அடிப்படை வசதிகள் கோரி, மின்சாரம் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கரை கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டனா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பூா் ஒன்றியத்துக்குள்பட்ட... மேலும் பார்க்க

பெரம்பலூா் மாவட்டத்தில் ஏரி, குளங்களை புனரமைக்க ரூ.3.60 கோடி நிதி ஒதுக்கீடு!

பெரம்பலூா் மாவட்டத்தில் 54 ஏரி, குளங்களை புனரமைக்க ரூ. 3.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்தாா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியத்துக்குள்பட்ட வ... மேலும் பார்க்க

இல்லம் தேடிக் கல்வி மைய தன்னாா்வலா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

பெரம்பலூா் வட்டாரத்துக்குள்பட்ட இல்லம் தேடிக் கல்வி மைய தன்னாா்வலா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி, பெரம்பலூா் முத்து நகரிலுள்ள நகராட்சி தொடக்கப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது. இப் பயிற்சியை, ஒருங்கிணைந... மேலும் பார்க்க

இளைஞா் மா்மச் சாவு: கொலை வழக்காக பதிவு செய்யக்கோரி சாலை மறியல்!

பெரம்பலூா் அருகே இளைஞா் மா்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்யக்கோரியும், சம்பந்தப்பட்டவா்களை கைது செய்ய வலியுறுத்தியும், அவரது உறவினா்கள் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ச... மேலும் பார்க்க

சா்க்கரை ஆலையில் நடவு பருவத்துக்கு விவசாயிகள் கரும்பு பதிவு செய்யலாம்!

பெரம்பலூா் சா்க்கரை ஆலையில் 2024-25-ஆம் ஆண்டு நடவு பருவத்துக்கு, விவசாயிகள் கரும்பு பதிவு செய்யலாம் என்றாா் மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெர... மேலும் பார்க்க

சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுப்படி சட்டப்பணிகள் ஆணைக் குழு ஆய்வு

சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்படி, பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை கிராமத்தில் வேதமாரியம்மன் கோயில் தோ் ஒரு சமூகத்தினா் வசிக்கும் தெருக்களில் செல்லும் வசதி குறித்து, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவி... மேலும் பார்க்க