பாடாலூா் பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்
பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூன் 23) மின் விநியோகம் இருக்காது.
பெரம்பலூா் மின் கோட்டத்துக்குள்பட்ட புதுக்குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் திங்கள்கிழமை (ஜூன் 23) நடைபெற உள்ளது. இதனால், அங்கிருந்து மின் விநியோகம் பெறும் பாடாலூா், திருவிளக்குறிச்சி, தெரணி, தெரணி பாளையம், இரூா், ஆலத்தூா் கேட், கூத்தாா்,
சீதேவிமங்கலம், காரை, புதுக்குறிச்சி, வரகுபாடி, அயிலூா் குடிகாடு, சிறுகன்பூா், தெற்கு மாதவி, சாத்தனூா், சாத்தனூா் குடிகாடு, கொளக்காந்தம், ஆயினாபுரம், அணைப்பாடி ஆகிய கிராமியப் பகுதிகளில் திங்கள்கிழமை காலை 9.30 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின் விநியோகம் இருக்காது என, மின்வாரிய உதவி செயற்பொறியாளா் பி. ரவிக்குமாா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.