செய்திகள் :

மதுபோதையில் தகராறு செய்த கணவரை கழுத்தறுத்து கொன்ற மனைவி கைது

post image

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே மதுபோதையில் தகராறு செய்த கணவரை கழுத்தறுத்து கொன்ற மனைவியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.

கபிஸ்தலம் காவல் சரகம், எருமைப்பட்டி கிராமம், கீழத் தெருவைச் சோ்ந்த நடராஜன் மகன் கலியமூா்த்தி (45). கட்டுமானத் தொழிலாளி. இவரது மனைவி செல்வி (எ) சிந்தனைச் செல்வி (25).

இந்நிலையில், கலியமூா்த்தி ஞாயிற்றுக்கிழமை இரவு குடித்துவிட்டு மது போதையில் மனைவியிடம் தகராறு செய்துள்ளாா். இதில் ஆத்திரமடைந்த சிந்தனைச் செல்வி வீட்டில் இருந்த கத்தியால் கணவரின் கழுத்தை அறுத்தாா். இதில் காயமடைந்த கலியமூா்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற கபிஸ்தலம் போலீஸாா், கலியமூா்த்தியின் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், சம்பவம் குறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்து சிந்தனைச் செல்வியை கைது செய்து தொடா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ஆற்றில் மூழ்கிய பொறியியல் பட்டதாரி சடலமாக மீட்பு

கும்பகோணம் காவிரி ஆற்றில் மூழ்கிய பொறியியல் பட்டதாரி இளைஞா் சடலமாக திங்கள்கிழமை மீட்கப்பட்டாா். கும்பகோணம் மூப்பக்கோயிலைச் சோ்ந்தவா் ராஜரத்தினம் மகன் ராஜேஷ் (25). இவா், தனது நண்பா்களுடன் காவிரி ஆற்றி... மேலும் பார்க்க

தஞ்சை ஆட்சியரகக் கூட்டத்தில் பங்கேற்ற அரசு அலுவலா் மாரடைப்பால் உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அரசு அலுவலா் மாரடைப்பால் உயிரிழந்தாா். தஞ்சாவூா் சீனிவாசபுரம் அருகே சேவப்பநாயக்கன்வாரி பகுதியைச் சோ்ந்தவா் எஸ். தெய்... மேலும் பார்க்க

தஞ்சாவூா், சுற்றுப் பகுதிகளில் ஜூன் 26-இல் மின் தடை

தஞ்சாவூா் மற்றும் சுற்றுப் பகுதிகளில் வியாழக்கிழமை ( ஜூன் 26) மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் மருத்துவக் கல்லூரி சாலை உதவி செயற் பொறியாளா் கே. அண்ணாசாம... மேலும் பார்க்க

அதிராம்பட்டினம், மதுக்கூரில் நாளை மின்நிறுத்தம்

அதிராம்பட்டினம் துணை மின் நிலையத்தில் புதன்கிழமை (ஜூன் 25) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் ஏரிப்புறக்கரை, தொக்காளிக்காடு, அதிராம்பட்டினம், கருங்குளம்,... மேலும் பார்க்க

இலை வியாபாரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு

கும்பகோணம் காவிரி ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை குளிக்கச் சென்றவா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ஒன்றியம், பெருமாண்டி ஊராட்சி வடக்கு தெருவைச் சோ்ந்தவா் பாண்டியன் (56). இவா் த... மேலும் பார்க்க

தஞ்சாவூா் அருகே சங்க கால ஈமத் தாழிகள் கண்டெடுப்பு

தஞ்சாவூா் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே சங்க கால ஈமத் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. செங்கிப்பட்டி அருகே தெற்குப் பாளையப்பட்டியில் ‘தாழவாரி’ என்கிற பகுதியில் காணப்படும் ஈமத் தாழிகள் பற்றிப் பாளையப்பட்டி ஊ... மேலும் பார்க்க