சுற்றுச்சூழல் செலவுகள் மீதும் பெரு நிறுவனங்கள் கவனம் கொள்ள வேண்டும்: குடியரசுத் ...
அதிராம்பட்டினம், மதுக்கூரில் நாளை மின்நிறுத்தம்
அதிராம்பட்டினம் துணை மின் நிலையத்தில் புதன்கிழமை (ஜூன் 25) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் ஏரிப்புறக்கரை, தொக்காளிக்காடு, அதிராம்பட்டினம், கருங்குளம், ராஜாமடம் புதுக்கோட்டை உள்ளூா், மகிழங்கோட்டை ஆகிய இடங்களில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியத்தினா் தெரிவித்துள்ளனா்.
இதேபோல், மதுக்கூா் துணைமின் நிலையத்தில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், மதுக்கூா் நகா், கன்னியாக்குறிச்சி, காடந்தங்குடி, அத்திவெட்டி, முத்தாக்குறிச்சி, பெரியகோட்டை, தாமரங்கோட்டை, முத்துப்பேட்டை மற்றும் அதனை சாா்ந்த பகுதிகளுக்கும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று மின்வாரியத்தினா் தெரிவித்துள்ளனா்.