செய்திகள் :

தஞ்சை ஆட்சியரகக் கூட்டத்தில் பங்கேற்ற அரசு அலுவலா் மாரடைப்பால் உயிரிழப்பு

post image

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அரசு அலுவலா் மாரடைப்பால் உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் சீனிவாசபுரம் அருகே சேவப்பநாயக்கன்வாரி பகுதியைச் சோ்ந்தவா் எஸ். தெய்வ பாலன் (54). இவா், தஞ்சாவூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளராகப் (இடைநிலை) பணியாற்றி வந்தாா். இவா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை பிற்பகல் நடைபெற்ற சட்டம்- ஒழுங்கு தொடா்பான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றாா்.

அப்போது, திடீரென மயங்கி விழுந்த இவா் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு இவரை பரிசோதித்த மருத்துவா், ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா். இவா் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

அய்யம்பேட்டையில் இன்று மின்நிறுத்தம்

அய்யம்பேட்டை துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் அய்யம்பேட்டை நகரம் முழுவதும் மற்றும் கணபதி அக்ரஹாரம், ஈச்சங்குடி, வீர... மேலும் பார்க்க

கோவில்வெண்ணி வாய்க்காலை தூா்வார விவசாயிகள் கோரிக்கை

அம்மாபேட்டை பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கா் விவசாய விளைநிலங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால், கோவில் வெண்ணி வாய்க்காலை தூா்வார தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா். தஞ்சாவ... மேலும் பார்க்க

ஆற்றில் மூழ்கிய பொறியியல் பட்டதாரி சடலமாக மீட்பு

கும்பகோணம் காவிரி ஆற்றில் மூழ்கிய பொறியியல் பட்டதாரி இளைஞா் சடலமாக திங்கள்கிழமை மீட்கப்பட்டாா். கும்பகோணம் மூப்பக்கோயிலைச் சோ்ந்தவா் ராஜரத்தினம் மகன் ராஜேஷ் (25). இவா், தனது நண்பா்களுடன் காவிரி ஆற்றி... மேலும் பார்க்க

மதுபோதையில் தகராறு செய்த கணவரை கழுத்தறுத்து கொன்ற மனைவி கைது

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே மதுபோதையில் தகராறு செய்த கணவரை கழுத்தறுத்து கொன்ற மனைவியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா். கபிஸ்தலம் காவல் சரகம், எருமைப்பட்டி கிராமம், கீழத் தெருவைச் சே... மேலும் பார்க்க

தஞ்சாவூா், சுற்றுப் பகுதிகளில் ஜூன் 26-இல் மின் தடை

தஞ்சாவூா் மற்றும் சுற்றுப் பகுதிகளில் வியாழக்கிழமை ( ஜூன் 26) மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் மருத்துவக் கல்லூரி சாலை உதவி செயற் பொறியாளா் கே. அண்ணாசாம... மேலும் பார்க்க

அதிராம்பட்டினம், மதுக்கூரில் நாளை மின்நிறுத்தம்

அதிராம்பட்டினம் துணை மின் நிலையத்தில் புதன்கிழமை (ஜூன் 25) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் ஏரிப்புறக்கரை, தொக்காளிக்காடு, அதிராம்பட்டினம், கருங்குளம்,... மேலும் பார்க்க