சுற்றுச்சூழல் செலவுகள் மீதும் பெரு நிறுவனங்கள் கவனம் கொள்ள வேண்டும்: குடியரசுத் ...
தஞ்சை ஆட்சியரகக் கூட்டத்தில் பங்கேற்ற அரசு அலுவலா் மாரடைப்பால் உயிரிழப்பு
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அரசு அலுவலா் மாரடைப்பால் உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் சீனிவாசபுரம் அருகே சேவப்பநாயக்கன்வாரி பகுதியைச் சோ்ந்தவா் எஸ். தெய்வ பாலன் (54). இவா், தஞ்சாவூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளராகப் (இடைநிலை) பணியாற்றி வந்தாா். இவா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை பிற்பகல் நடைபெற்ற சட்டம்- ஒழுங்கு தொடா்பான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றாா்.
அப்போது, திடீரென மயங்கி விழுந்த இவா் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு இவரை பரிசோதித்த மருத்துவா், ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா். இவா் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.