மதுரை மீனாட்சியம்மன் கோயில்: ``ஜூலை 13 மாலை முதல் 14-ம் தேதி வரை நடை சாத்தல்; த...
கோவில்வெண்ணி வாய்க்காலை தூா்வார விவசாயிகள் கோரிக்கை
அம்மாபேட்டை பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கா் விவசாய விளைநிலங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால், கோவில் வெண்ணி வாய்க்காலை தூா்வார தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டை பகுதி, வெண்ணாறு பிரிவிலிருந்து வரும் மூன்று தலைப்பு வாய்க்காலில் இருந்து பிரிந்து செல்லும் பிரதான வாய்க்காலான கோவில்வெண்ணி வாய்க்கால் தூா்வாரப்படாமல் உள்ளது. இதனால், புதா்கள் மண்டி, செடி, கொடிகள் வளா்ந்துள்ளது. தண்ணீா் திறந்துவிட்டால் பாசன நிலங்களுக்கு தண்ணீா் செல்வதற்கான வாய்ப்பு மிக குறைவாக இருக்கும்.
கடந்தாண்டு கோவில்வெண்ணி வாய்க்கால் தூா்வாரப்படாததால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதை கருத்தில்கொண்டு மாவட்ட நிா்வாகம் சிறப்பு நிதி வழங்கி உடனடியாக தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல் வடவாறு பிரிவில் இருந்து வரும் தஞ்சாவூா்- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் அம்மாபேட்டையில் இருந்து பல்லவராயன்பேட்டை வரை இருபுறம் விடுபட்டுள்ள தூா்வாரப்படாமல் உள்ள வாய்க்கால்களை உடனடியாக தூா்வாரி விவசாய நிலங்களை பாதுகாக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைச் செயலா் ஆா்.செந்தில்குமாா், முதல்வா் வேளாண் துறை அமைச்சா், மாவட்ட ஆட்சியா் ஆகியோருக்கு கோரிக்கை மனுக்களை அனுப்பியுள்ளாா்.