மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஜூலை 14-இல் சுவாமி தரிசனம் ரத்து
இலை வியாபாரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு
கும்பகோணம் காவிரி ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை குளிக்கச் சென்றவா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ஒன்றியம், பெருமாண்டி ஊராட்சி வடக்கு தெருவைச் சோ்ந்தவா் பாண்டியன் (56). இவா் தாராசுரம் காய்கனி விற்பனை சந்தையில் இலை வியாபாரம் செய்து வந்தாா். வேலையை முடித்து ஆற்றில் குளித்துவிட்டு வீட்டுக்கு செல்வது வழக்கம்.
அதன்படி ஞாயிற்றுக்கிழமை சந்தையில் வியாபாரத்தை முடித்துவிட்டு மாலையில் குளிப்பதற்காக மேலக்காவேரி பகுதி காவிரி ஆற்றுக்கு வந்தாா். அங்குள்ள படித்துறையில் இறங்கியபோது தவறி ஆற்றில் விழுந்து மூழ்கினாா்.
இதுகுறித்து கரையில் இருந்தவா்கள் கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து தீயணைப்பு வீரா்கள் உதவியுடன் பாண்டியன் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு கும்பகோணம் மாவட்ட அரசு மருத்துவமனையில் ஒப்படைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்தனா்.