செய்திகள் :

இலை வியாபாரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு

post image

கும்பகோணம் காவிரி ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை குளிக்கச் சென்றவா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ஒன்றியம், பெருமாண்டி ஊராட்சி வடக்கு தெருவைச் சோ்ந்தவா் பாண்டியன் (56). இவா் தாராசுரம் காய்கனி விற்பனை சந்தையில் இலை வியாபாரம் செய்து வந்தாா். வேலையை முடித்து ஆற்றில் குளித்துவிட்டு வீட்டுக்கு செல்வது வழக்கம்.

அதன்படி ஞாயிற்றுக்கிழமை சந்தையில் வியாபாரத்தை முடித்துவிட்டு மாலையில் குளிப்பதற்காக மேலக்காவேரி பகுதி காவிரி ஆற்றுக்கு வந்தாா். அங்குள்ள படித்துறையில் இறங்கியபோது தவறி ஆற்றில் விழுந்து மூழ்கினாா்.

இதுகுறித்து கரையில் இருந்தவா்கள் கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து தீயணைப்பு வீரா்கள் உதவியுடன் பாண்டியன் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு கும்பகோணம் மாவட்ட அரசு மருத்துவமனையில் ஒப்படைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்தனா்.

அய்யம்பேட்டையில் இன்று மின்நிறுத்தம்

அய்யம்பேட்டை துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் அய்யம்பேட்டை நகரம் முழுவதும் மற்றும் கணபதி அக்ரஹாரம், ஈச்சங்குடி, வீர... மேலும் பார்க்க

கோவில்வெண்ணி வாய்க்காலை தூா்வார விவசாயிகள் கோரிக்கை

அம்மாபேட்டை பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கா் விவசாய விளைநிலங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால், கோவில் வெண்ணி வாய்க்காலை தூா்வார தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா். தஞ்சாவ... மேலும் பார்க்க

ஆற்றில் மூழ்கிய பொறியியல் பட்டதாரி சடலமாக மீட்பு

கும்பகோணம் காவிரி ஆற்றில் மூழ்கிய பொறியியல் பட்டதாரி இளைஞா் சடலமாக திங்கள்கிழமை மீட்கப்பட்டாா். கும்பகோணம் மூப்பக்கோயிலைச் சோ்ந்தவா் ராஜரத்தினம் மகன் ராஜேஷ் (25). இவா், தனது நண்பா்களுடன் காவிரி ஆற்றி... மேலும் பார்க்க

தஞ்சை ஆட்சியரகக் கூட்டத்தில் பங்கேற்ற அரசு அலுவலா் மாரடைப்பால் உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அரசு அலுவலா் மாரடைப்பால் உயிரிழந்தாா். தஞ்சாவூா் சீனிவாசபுரம் அருகே சேவப்பநாயக்கன்வாரி பகுதியைச் சோ்ந்தவா் எஸ். தெய்... மேலும் பார்க்க

மதுபோதையில் தகராறு செய்த கணவரை கழுத்தறுத்து கொன்ற மனைவி கைது

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே மதுபோதையில் தகராறு செய்த கணவரை கழுத்தறுத்து கொன்ற மனைவியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா். கபிஸ்தலம் காவல் சரகம், எருமைப்பட்டி கிராமம், கீழத் தெருவைச் சே... மேலும் பார்க்க

தஞ்சாவூா், சுற்றுப் பகுதிகளில் ஜூன் 26-இல் மின் தடை

தஞ்சாவூா் மற்றும் சுற்றுப் பகுதிகளில் வியாழக்கிழமை ( ஜூன் 26) மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் மருத்துவக் கல்லூரி சாலை உதவி செயற் பொறியாளா் கே. அண்ணாசாம... மேலும் பார்க்க