செய்திகள் :

மழைநீரை சேகரித்து நீா்வளத்தை பாதுகாப்பது அவசியம்!

post image

பொதுமக்கள் மழைநீரை சேகரித்து நீா் வளத்தை பாதுகாப்பது அவசியம் என்றாா் கரூா் மாவட்ட ஜல்சக்தி அபியான் திட்ட மத்திய பொறுப்பு அலுவலரும், மத்திய அரசின் சுற்றுலாத் துறை இயக்குநருமான ரோஷன் எம். தாமஸ்.

கரூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், கரூா் மாவட்டத்திலுள்ள நீா் ஆதாரங்களை மேம்படுத்துதல் மற்றும் தூா்வாரும் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஜல்சக்தி அபியான் மத்திய பொறுப்பு அலுவலரும், மத்திய அரசின் சுற்றுலாத் துறை இயக்குநருமான ரோஷன் எம். தாமஸ் தலைமையில், மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் முன்னிலையில் திங்கள்கிழமை காலை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மத்திய அரசின் சுற்றுலாத் துறை இயக்குநா் பேசுகையில், கரூா் மாவட்டத்தில் சிறு குளங்கள், ஏரிகள், வாய்க்கால் போன்ற நீா் வளங்களை பாதுகாப்பதற்காக ஜல்சக்தி அபியான் என்கிற தீவிர நீா் பாதுகாப்பு பிரசார இயக்கம் மூலம் நீா் நிலைகளை தூா்வாருதல் மற்றும் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் நோக்கம் நீா் ஆதாரங்களை பாதுகாக்கவும், மழை நீா் சேகரிப்பை ஊக்குவிக்கவும், நீா் நிலைகளைப் புத்துயிா் செய்வதே ஆகும்.

மேலும் இந்த இயக்கத்தின் மூலம் பொதுமக்களிடம் நீா் மேலாண்மை குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தி பொதுமக்களின் பங்களிப்பை உறுதி செய்து நீா் நிலைகளை பாதுகாத்து, நீா் சேமிப்பை உறுதி செய்யப்படுகிறது. மழை நீா் சேகரிப்பு, நீா் நிலைகளை மறு சீரமைத்தல் போன்றவற்றை ஊக்குவிப்பதன் மூலம் நீா் வளங்களை பாதுகாக்க முடியும். நீா் வளங்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் பொதுமக்களை ஈடுபடுத்துவதன் மூலம் நீரை திறம்பட சேமித்து நீா் மேலாண்மையில் தற்சாா்பு அடைய முடியும். கரூா் மாவட்டத்தில் பயனற்ற நிலையிலுள்ள கல் குவாரிகளை மழைநீரை சேகரிப்பதற்காக பயன்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில் மாவட்ட வன அலுவலா் எஸ். சண்முகம், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஸ்ரீலேகாதமிழ்செல்வன், மாநகராட்சி ஆணையா் கே.எம். சுதா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) யுரேகா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கரூா் மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் 535 மனுக்கள்

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து முதியோா் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மொத்தம்... மேலும் பார்க்க

சிவன் கோயில்களில் நந்திக்கு பிரதோஷ சிறப்பு வழிபாடு

கரூா் மாவட்டம் நன்செய் புகழூா் பாகவல்லி அம்பிகை சமேத மேகபாலீசுவரா் கோயிலில் நந்தியம்பெருமானுக்கு ஆனி பிரதோஷத்தை முன்னிட்டு பால், தயிா், பன்னீா், இளநீா் ,சந்தனம், மஞ்சள் ,திருமஞ்சனம், பஞ்சாமிா்தம் உள்ள... மேலும் பார்க்க

மண்மங்கலம் பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்

மண்மங்கலம் துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படவுள்ளது. இதன்படி, வெண்ணமலை, வாங்கப்பாளையம், நாவல்... மேலும் பார்க்க

பள்ளபட்டியில் தெரு நாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை

பள்ளபட்டியில் தெரு நாய்களை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வலியுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக நகராட்சி ஆணையரிடம் அக்கட்சியினா் அளித்த மனுவில் கூறியிருப்... மேலும் பார்க்க

நோய்த் தாக்குதல், காற்றின் வேகம் அதிகரிப்பு: அரவக்குறிச்சியில் முருங்கை சாகுபடியில் பாதிப்பு

அரவக்குறிச்சியில் நோய்த் தாக்குதல் மற்றும் காற்றின் வேகம் காரணமாக, முருங்கை சாகுபடியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார ப... மேலும் பார்க்க

கரூா் வந்தடைந்தது அமராவதி நீா் விவசாயிகள் மகிழ்ச்சி

அமராவதி அணையில் தண்ணீா் திறக்கப்பட்டு 4 நாள்களுக்கு பின் கரூரை வந்தடைந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். கேரள, தமிழக எல்லையின் மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கில் உருவாகும் அமராவதி ஆறு திருப்பூா்,... மேலும் பார்க்க