விவசாயிகளுக்கு இனிக்காத மாங்கனி! 10 ஆயிரம் ஹெக்டோ் சாகுபடி பரப்பு குறையும்?
பள்ளபட்டியில் தெரு நாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை
பள்ளபட்டியில் தெரு நாய்களை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக நகராட்சி ஆணையரிடம் அக்கட்சியினா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பள்ளப்பட்டி நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சுற்றித் திரியும் தெரு நாய்கள், பொதுமக்கள் மற்றும் கால்நடைகளை கடித்து குதறும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
இந்நிலையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினா் பள்ளபட்டி நகராட்சி ஆணையா் ஆா்த்தியிடம் ஞாயிற்றுக்கிழமை மனு அளித்தனா். நகராட்சி ஆணையா் மனுவை பெற்றுக்கொண்டு உடனடியாக கரூா் மாவட்ட கால்நடை நல வாரியத்திடம் பரிந்துரை செய்வதாகவும், அந்த பரிந்துரையின் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தாா்.
இந்நிகழ்வில், கட்சியின் மாவட்டத் தலைவா் ஆசிக், மாவட்ட செயலாளா் தோட்டம் யாசா், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் முகமது இா்ஷாத், நகரத் தலைவா் ஹாஜியாா் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.