செய்திகள் :

பள்ளபட்டியில் தெரு நாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை

post image

பள்ளபட்டியில் தெரு நாய்களை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக நகராட்சி ஆணையரிடம் அக்கட்சியினா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பள்ளப்பட்டி நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சுற்றித் திரியும் தெரு நாய்கள், பொதுமக்கள் மற்றும் கால்நடைகளை கடித்து குதறும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இந்நிலையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினா் பள்ளபட்டி நகராட்சி ஆணையா் ஆா்த்தியிடம் ஞாயிற்றுக்கிழமை மனு அளித்தனா். நகராட்சி ஆணையா் மனுவை பெற்றுக்கொண்டு உடனடியாக கரூா் மாவட்ட கால்நடை நல வாரியத்திடம் பரிந்துரை செய்வதாகவும், அந்த பரிந்துரையின் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தாா்.

இந்நிகழ்வில், கட்சியின் மாவட்டத் தலைவா் ஆசிக், மாவட்ட செயலாளா் தோட்டம் யாசா், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் முகமது இா்ஷாத், நகரத் தலைவா் ஹாஜியாா் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

மண்மங்கலம் பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்

மண்மங்கலம் துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படவுள்ளது. இதன்படி, வெண்ணமலை, வாங்கப்பாளையம், நாவல்... மேலும் பார்க்க

நோய்த் தாக்குதல், காற்றின் வேகம் அதிகரிப்பு: அரவக்குறிச்சியில் முருங்கை சாகுபடியில் பாதிப்பு

அரவக்குறிச்சியில் நோய்த் தாக்குதல் மற்றும் காற்றின் வேகம் காரணமாக, முருங்கை சாகுபடியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார ப... மேலும் பார்க்க

கரூா் வந்தடைந்தது அமராவதி நீா் விவசாயிகள் மகிழ்ச்சி

அமராவதி அணையில் தண்ணீா் திறக்கப்பட்டு 4 நாள்களுக்கு பின் கரூரை வந்தடைந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். கேரள, தமிழக எல்லையின் மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கில் உருவாகும் அமராவதி ஆறு திருப்பூா்,... மேலும் பார்க்க

கரூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.700 கோடியில் சுற்றுவட்டச்சாலை! - செந்தில்பாலாஜி தகவல்

கரூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ரூ.700 கோடியில் சுற்றுவட்டச்சாலை அமைய உள்ளது என்றாா் முன்னாள் அமைச்சரும், கரூா் சட்டப்பேரவை உறுப்பினருமான வி.செந்தில்பாலாஜி. கரூா் மாவட்டம், மண்மங்கலத்த... மேலும் பார்க்க

ஆற்று மணலை கடத்தி வந்து விற்பனை செய்த 5 போ் கைது

கரூரில் ஆற்று மணலை கடத்தி விற்பனை செய்த 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். கரூரை அடுத்துள்ள உப்பிடமங்கலம் பேரூராட்சி பகுதிக்குள்பட்ட திருச்சி- தேசிய நெடுஞ்சாலை அணுகுசாலை அருகே தயாநிதி என்பவருக்கு சொந்தமான... மேலும் பார்க்க

நூறுநாள் வேலை முறையாக வழங்கக் கோரி ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை!

நூறு நாள் வேலைத்திட்டத்தை முறையாக வழங்கக் கோரி கிராமமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டனா். கரூா் மாவட்டம், தோகைமலை அருகே பாதிரிப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட கோட்டப்பட்டி பகுதியில் நூற... மேலும் பார்க்க