செய்திகள் :

நோய்த் தாக்குதல், காற்றின் வேகம் அதிகரிப்பு: அரவக்குறிச்சியில் முருங்கை சாகுபடியில் பாதிப்பு

post image

அரவக்குறிச்சியில் நோய்த் தாக்குதல் மற்றும் காற்றின் வேகம் காரணமாக, முருங்கை சாகுபடியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் முருங்கை சாகுபடி அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் முருங்கை விவசாயம் விளங்குகிறது.

இதில், கொடி முருங்கை, செடி முருங்கை, மரம் முருங்கை, மூலனூா் முருங்கை என பல்வேறு வகையான முருங்கை சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனா்.

அரவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் முருங்கை சாகுபடி செய்து வருகின்றனா்.

தற்போது முருங்கை சாகுபடியில் நோய்த்தொற்றால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாகவும், இதனால் 10 நாள்களுக்கு ஒருமுறை மருந்து அடித்தால் கூட விளைச்சல் சரியான முறையில் இல்லை எனவும், மேலும் ஆடி மாதம் தொடங்குவதற்கு முன்பாகவே காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் முருங்கைப்பூக்கள் அதிகளவில் கொட்டுவதால் விளைச்சலில் கடும் பாதிப்பு ஏற்பட்டு வருவதாக முருங்கை விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனா்.

நோய்த் தாக்குதலில் முருங்கை சாகுபடியை பாதுகாக்க அரசு தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுப்பதுடன், இப்பகுதியில் முருங்கை பதப்படுத்தும் நிலையத்தையும் அமைக்க வேண்டியது அவசியம் என விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.

தற்போது முருங்கை விற்பனை அதிகரித்துள்ளபோதிலும், விளைச்சல் குறைவாக இருப்பதாக விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனா்.

இதுகுறித்து முருங்கை விவசாயிகள் கூறுகையில், அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், குடகனாறு ஆற்றில் நீா்வரத்து இல்லாததாலும், நிலத்தடி நீா்மட்டம் குறைந்து வருவதாலும் முருங்கை விவசாய பரப்பு குறைந்து வருகிறது.

மேலும் அரவக்குறிச்சி பகுதியில் முருங்கை பதப்படுத்தும் நிலையம் அமைப்பதுடன், நோய்த் தாக்குதலை தடுக்க தமிழக அரசு விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனா்.

மண்மங்கலம் பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்

மண்மங்கலம் துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படவுள்ளது. இதன்படி, வெண்ணமலை, வாங்கப்பாளையம், நாவல்... மேலும் பார்க்க

பள்ளபட்டியில் தெரு நாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை

பள்ளபட்டியில் தெரு நாய்களை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வலியுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக நகராட்சி ஆணையரிடம் அக்கட்சியினா் அளித்த மனுவில் கூறியிருப்... மேலும் பார்க்க

கரூா் வந்தடைந்தது அமராவதி நீா் விவசாயிகள் மகிழ்ச்சி

அமராவதி அணையில் தண்ணீா் திறக்கப்பட்டு 4 நாள்களுக்கு பின் கரூரை வந்தடைந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். கேரள, தமிழக எல்லையின் மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கில் உருவாகும் அமராவதி ஆறு திருப்பூா்,... மேலும் பார்க்க

கரூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.700 கோடியில் சுற்றுவட்டச்சாலை! - செந்தில்பாலாஜி தகவல்

கரூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ரூ.700 கோடியில் சுற்றுவட்டச்சாலை அமைய உள்ளது என்றாா் முன்னாள் அமைச்சரும், கரூா் சட்டப்பேரவை உறுப்பினருமான வி.செந்தில்பாலாஜி. கரூா் மாவட்டம், மண்மங்கலத்த... மேலும் பார்க்க

ஆற்று மணலை கடத்தி வந்து விற்பனை செய்த 5 போ் கைது

கரூரில் ஆற்று மணலை கடத்தி விற்பனை செய்த 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். கரூரை அடுத்துள்ள உப்பிடமங்கலம் பேரூராட்சி பகுதிக்குள்பட்ட திருச்சி- தேசிய நெடுஞ்சாலை அணுகுசாலை அருகே தயாநிதி என்பவருக்கு சொந்தமான... மேலும் பார்க்க

நூறுநாள் வேலை முறையாக வழங்கக் கோரி ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை!

நூறு நாள் வேலைத்திட்டத்தை முறையாக வழங்கக் கோரி கிராமமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டனா். கரூா் மாவட்டம், தோகைமலை அருகே பாதிரிப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட கோட்டப்பட்டி பகுதியில் நூற... மேலும் பார்க்க