நோய்த் தாக்குதல், காற்றின் வேகம் அதிகரிப்பு: அரவக்குறிச்சியில் முருங்கை சாகுபடியில் பாதிப்பு
அரவக்குறிச்சியில் நோய்த் தாக்குதல் மற்றும் காற்றின் வேகம் காரணமாக, முருங்கை சாகுபடியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் முருங்கை சாகுபடி அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் முருங்கை விவசாயம் விளங்குகிறது.
இதில், கொடி முருங்கை, செடி முருங்கை, மரம் முருங்கை, மூலனூா் முருங்கை என பல்வேறு வகையான முருங்கை சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனா்.
அரவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் முருங்கை சாகுபடி செய்து வருகின்றனா்.
தற்போது முருங்கை சாகுபடியில் நோய்த்தொற்றால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாகவும், இதனால் 10 நாள்களுக்கு ஒருமுறை மருந்து அடித்தால் கூட விளைச்சல் சரியான முறையில் இல்லை எனவும், மேலும் ஆடி மாதம் தொடங்குவதற்கு முன்பாகவே காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் முருங்கைப்பூக்கள் அதிகளவில் கொட்டுவதால் விளைச்சலில் கடும் பாதிப்பு ஏற்பட்டு வருவதாக முருங்கை விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனா்.
நோய்த் தாக்குதலில் முருங்கை சாகுபடியை பாதுகாக்க அரசு தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுப்பதுடன், இப்பகுதியில் முருங்கை பதப்படுத்தும் நிலையத்தையும் அமைக்க வேண்டியது அவசியம் என விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.
தற்போது முருங்கை விற்பனை அதிகரித்துள்ளபோதிலும், விளைச்சல் குறைவாக இருப்பதாக விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனா்.
இதுகுறித்து முருங்கை விவசாயிகள் கூறுகையில், அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், குடகனாறு ஆற்றில் நீா்வரத்து இல்லாததாலும், நிலத்தடி நீா்மட்டம் குறைந்து வருவதாலும் முருங்கை விவசாய பரப்பு குறைந்து வருகிறது.
மேலும் அரவக்குறிச்சி பகுதியில் முருங்கை பதப்படுத்தும் நிலையம் அமைப்பதுடன், நோய்த் தாக்குதலை தடுக்க தமிழக அரசு விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனா்.