செய்திகள் :

டிக்சன் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் 2.77% பங்குகளை கையகப்படுத்திய மோதிலால் ஓஸ்வால்!

post image

புதுதில்லி: நொய்டாவை தளமாகக் கொண்ட டிக்சன் டெக்னாலஜிஸ் (இந்தியா) நிறுவனத்தின் உரிமையாளரான சுனில் வச்சானி தனது 2.77% பங்குகளை அதாவது 16.70 லட்சம் பங்குகளை ரூ.2,221 கோடிக்கு ஒப்பந்தத்தின் மூலம் கைமாறியதாக இன்று தெரிவித்தார்.

பங்குகள் ஒவ்வொன்றும் ரூ.13,301.47 விலையில் கைமாறியதாகவும், இதன் ஒப்பந்த மதிப்பு ரூ.2,221.34 கோடி என்றது. பங்கு விற்பனையைத் தொடர்ந்து, டிக்சனில் வச்சானியின் பங்கு 5.34 சதவிகிதத்திலிருந்து 2.57 சதவிகிதமாகக் குறைந்தது.

இதற்கிடையில், மோதிலால் ஓஸ்வால் மியூச்சுவல் ஃபண்ட் இரண்டு பகுதிகளாக 14.45 லட்சம் பங்குகளை வாங்கியுள்ளது. இதன் மூலம் டிக்சன் டெக்னாலஜிஸில் 2.39 சதவிகித பங்குகளை தலா ஒன்றுக்கு ரூ.13,307.96 என்று விலையில் மொத்தமாக ரூ.1,924 கோடிக்கு வாங்கி உள்ளது மோதிலால் ஓஸ்வால்.

பங்குகளை வாங்கிய பிறகு, டிக்சன் டெக்னாலஜிஸில் மோதிலால் ஓஸ்வால் மியூச்சுவல் ஃபண்டின் பங்குகள் 2.24 சதவிகிதத்திலிருந்து 4.63 சதவிகிதமாக உயர்ந்தன.

மும்பை பங்குச் சந்தையில் டிக்சன் டெக்னாலஜிஸ் (இந்தியா) பங்குகள் 3.55 சதவிகிதம் உயர்ந்து ரூ.14,554.10 ஆக முடிவடைந்தது.

இதையும் படிக்க: எரிசக்தி குழாய் திறனில் ரூ.844 கோடி முதலீடு செய்யும் கெயில்!

எரிசக்தி குழாய் திறனில் ரூ.844 கோடி முதலீடு செய்யும் கெயில்!

புது தில்லி: அதிகரித்து வரும் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்வதற்காக தஹேஜ்-உரான்-டபோல்-பன்வெல் இயற்கை எரிவாயு குழாய்த் திறனை விரிவுபடுத்த ரூ.844 கோடி முதலீடு செய்யப்போவதாக அரசுக்குச் சொந்தமான எரிவாயு பய... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 23 காசுகள் சரிந்து ரூ.86.78 ஆக முடிவு!

மும்பை: ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்க தாக்குதலைத் தொடர்ந்து டாலர் வலுவடைதல் மற்றும் நிலையற்ற கச்சா எண்ணெய் விலை ஆகியவற்றின் காரணமாக இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 2... மேலும் பார்க்க

மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பால் பங்குச் சந்தைகள் சரிவுடன் முடிவு!

மும்பை: ஈரானில் உள்ள மூன்று முக்கிய அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா குண்டு வீசித் தாக்கியதையடுத்து, மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் பதற்றங்கள் மற்றும் நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் உள்ளூரில் பங்குச... மேலும் பார்க்க

இஸ்ரேல் - ஈரான் போர்: கடும் சரிவில் பங்குச் சந்தை!

வாரத்தின் முதல் நாளான இன்று(திங்கள்கிழமை) பங்குச் சந்தை கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றது.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,704.07 என்ற புள்ளிகளில் தொடங்கியது. காலை 11.46... மேலும் பார்க்க

ஈரான் மீது தாக்குதல்: பங்குச்சந்தைகளில் சரிவு

ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலைத் தொடர்ந்து இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.வாரத்தின் முதல் நாளான இன்று மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 62,940 புள்ளிக... மேலும் பார்க்க

தங்கம் விலை குறைந்தது! வெள்ளி விலையில் மாற்றமில்லை!!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை காலை வணிகம் தொடங்கியதும் ரூ.40 குறைந்து ரூ.73,840-க்கு விற்பனையாகிறது.கடந்த வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில், ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.73,... மேலும் பார்க்க