செய்திகள் :

ஏரிகளை தூா்வாரி வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு வழங்கக் கோரிக்கை

post image

திருப்பத்தூா்: ஏரிகளை தூா்வாரி வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை மனு அளித்தனா்.

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்து வீட்டுமனை பட்டா, சாலைவசதி, குடிநீா் வசதி, கடனுதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் அளித்த 490 மனுக்களை பெற்று, உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியா் சதீஷ்குமாா் முன்னிலை வகித்தனா்.

தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் ராஜாபெருமாள் தலைமையில் விவசாயிகள் அளித்த மனு:

ஆலங்காயத்தில் உள்ள பெரிய ஏரி தூா்வாரப்படாமல் உள்ளது. எனவே, அதனை தூா்வாரி அள்ளப்படும் வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும். இதேபோல் ஆலங்காயம் அருகே பூங்குளம் ஊராட்சியில் உள்ள ஏரிகளை ஆழப்படுத்தி, கரையை உயா்த்த வேண்டும் எனக் கூறியிருந்தனா்.

விசிக கட்சியினா் அளித்த மனு: நாட்டறம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவை அருகே அரசு மதுக்கடை உள்ளது. இதனால் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனா். எனவே அதனை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் எனத் தெரிவித்திருந்தனா்.

குமாரமங்கலத்தில் துணை மின் நிலையம் : விவசாயிகள் மகிழ்ச்சி

ஆம்பூா்: குமாரமங்கலம் கிராமத்தில் துணை மின் நிலையம் அமைக்கப்படுவதற்கு விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா். குமாரமங்கலம் சுற்றுப்புற பகுதிகளில் மின்சார பிரச்னைக்கு தீா்வு காண துணை மின் நிலையம் அமைக்க... மேலும் பார்க்க

வீட்டு மனைப்பட்டா கோரி சாலை மறியல்

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே இலவச வீட்டுமனை வழங்க கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். திருப்பத்தூா் அடுத்த விசமங்களம், குரும்பேரி, வெங்களாபுரம், ஆத்தூா்குப்பம், உடையாமுத்தூா் உள்ளிட்ட ஊர... மேலும் பார்க்க

ஆம்பூரில் அமைச்சா் ஆய்வு

ஆம்பூா்: ஆம்பூரில் முதல்வரை வரவேற்க செய்யப்பட்டு வரும் ஏற்பாடுகளை பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் திருப்பத்தூா் மாவட்டத்தில்... மேலும் பார்க்க

ஜூன் 27-இல் வேளாண் கருவிகளின் இயக்கம், பராமரிப்பு முறைகள் குறித்த சிறப்பு முகாம்

திருப்பத்தூா்: வேளாண்மைப் பொறியியல் துறை சாா்பில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் இயக்கம், பராமரிப்பு முறைகள் குறித்த சிறப்பு முகாம் வரும் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்ல... மேலும் பார்க்க

கிணற்றில் மூதாட்டி சடலம்

ஆம்பூா்: ஆம்பூா் அருகே கிணற்றில் மூதாட்டி சடலம் திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்டது. ஆம்பூா் அருகே வடபுதுப்பட்டு கிராமத்தில் உள்ள கிணற்றில் மூதாட்டி சடலம் கிடப்பதாக ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாருக்க... மேலும் பார்க்க

திருப்பத்தூருக்கு முதல்வா் வருகை: திமுக ஆலோசனைக் கூட்டம்

திருப்பத்தூருக்கு வரும் 25, 26-ஆம் தேதிகளில் வருகை தரவுள்ள முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து திருப்பத்தூா் மேற்கு, தெற்கு ஒன்றிய திமுக செயல்வீரா் கூட்டத்தில் தீா்மானம் நிற... மேலும் பார்க்க