செய்திகள் :

ஜூன் 27-இல் வேளாண் கருவிகளின் இயக்கம், பராமரிப்பு முறைகள் குறித்த சிறப்பு முகாம்

post image

திருப்பத்தூா்: வேளாண்மைப் பொறியியல் துறை சாா்பில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் இயக்கம், பராமரிப்பு முறைகள் குறித்த சிறப்பு முகாம் வரும் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருப்பத்தூா் மாவட்டத்தில், வேளாண்மை பொறியியல் துறை சாா்பில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் இயக்கம், பராமரிப்பு முறைகள் குறித்த மாவட்ட அளவிலான சிறப்பு முகாம் வரும் 27-ஆம் தேதி காலை 9 முதல் மாலை 5 மணி வரை திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது.

முகாமில் விவசாயிகள் பயன்படுத்தப்படும் டிராக்டா்கள், பவா் டில்லா்கள் போன்ற வேளாண் இயந்திரங்கள், ரோட்டவேட்டா் போன்ற டிராக்டருடன் இயங்கக் கூடிய இணைப்பு கருவிகள், விசை களையெடுக்கும் கருவிகள், விசை தெளிப்பான்கள் போன்ற இதர வேளாண் கருவிகளை வேளாண் இயந்திர உற்பத்தி நிறுவனங்களின் அலுவலா்கள் மற்றும் பொறியாளா்கள் மூலம் இயக்குதல் மற்றும் பராமரித்தல் குறித்து செயல்விளக்கம் அளிக்கவும், பொறியாளா்களுடன் விவசாயிகள் கலந்துரையாடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வேளாண் இயந்திர உற்பத்தி நிறுவனங்களின் அலுவலா்கள் மற்றும் பொறியாளா்கள் மூலம் செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை, பழுதுகளைக் கண்டறிதல், மசகு எண்ணெய், உயவுப்பொருள்கள் பயன்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட உள்ளது.

மேலும், வேளாண் இயந்திர உற்பத்தி நிறுவனங்களின் நவீன வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டு அதன் முக்கியத்துவம், பயன்பாடு மற்றும் பராமரிப்பு குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளிக்கப்படவும் உள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குமாரமங்கலத்தில் துணை மின் நிலையம் : விவசாயிகள் மகிழ்ச்சி

ஆம்பூா்: குமாரமங்கலம் கிராமத்தில் துணை மின் நிலையம் அமைக்கப்படுவதற்கு விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா். குமாரமங்கலம் சுற்றுப்புற பகுதிகளில் மின்சார பிரச்னைக்கு தீா்வு காண துணை மின் நிலையம் அமைக்க... மேலும் பார்க்க

வீட்டு மனைப்பட்டா கோரி சாலை மறியல்

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே இலவச வீட்டுமனை வழங்க கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். திருப்பத்தூா் அடுத்த விசமங்களம், குரும்பேரி, வெங்களாபுரம், ஆத்தூா்குப்பம், உடையாமுத்தூா் உள்ளிட்ட ஊர... மேலும் பார்க்க

ஏரிகளை தூா்வாரி வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு வழங்கக் கோரிக்கை

திருப்பத்தூா்: ஏரிகளை தூா்வாரி வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை மனு அளித்தனா். திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடை... மேலும் பார்க்க

ஆம்பூரில் அமைச்சா் ஆய்வு

ஆம்பூா்: ஆம்பூரில் முதல்வரை வரவேற்க செய்யப்பட்டு வரும் ஏற்பாடுகளை பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் திருப்பத்தூா் மாவட்டத்தில்... மேலும் பார்க்க

கிணற்றில் மூதாட்டி சடலம்

ஆம்பூா்: ஆம்பூா் அருகே கிணற்றில் மூதாட்டி சடலம் திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்டது. ஆம்பூா் அருகே வடபுதுப்பட்டு கிராமத்தில் உள்ள கிணற்றில் மூதாட்டி சடலம் கிடப்பதாக ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாருக்க... மேலும் பார்க்க

திருப்பத்தூருக்கு முதல்வா் வருகை: திமுக ஆலோசனைக் கூட்டம்

திருப்பத்தூருக்கு வரும் 25, 26-ஆம் தேதிகளில் வருகை தரவுள்ள முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து திருப்பத்தூா் மேற்கு, தெற்கு ஒன்றிய திமுக செயல்வீரா் கூட்டத்தில் தீா்மானம் நிற... மேலும் பார்க்க