கிணற்றில் மூதாட்டி சடலம்
ஆம்பூா்: ஆம்பூா் அருகே கிணற்றில் மூதாட்டி சடலம் திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்டது.
ஆம்பூா் அருகே வடபுதுப்பட்டு கிராமத்தில் உள்ள கிணற்றில் மூதாட்டி சடலம் கிடப்பதாக ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் அங்கு சென்று ஆம்பூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் உதவியுடன் சடலத்தை மீட்டனா். இறந்து கிடந்தவா் அதே பகுதியைச் சோ்ந்த ராஜேஸ்வரி (70) என்பது தெரிய வந்தது.
சடலம் மீட்கப்பட்டு உடற்கூறு பரிசோதனைக்காக ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.