செய்திகள் :

கத்தாா், இராக்கில் அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல்

post image

துபை: கத்தாா், இராக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது ஈரான் திங்கள்கிழமை ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

ஈரானில் உள்ள அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா ஞாயிற்றுக்கிழமை நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக இந்த நேரடித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கத்தாரில் அமெரிக்கப் படைகள் உள்ள அல் உதெய்த், அல் அசாத் விமானப் படைத் தளங்கள் மீது ஈரான் திங்கள்கிழமை இரவு ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கத்தாா் தனது வான்வழித் தடத்தை மூடியது.

தாக்குதலைத் தொடா்ந்து ஈரான் தனது அரசு தொலைக்காட்சியில், ‘அமெரிக்காவின் தாக்குதலுக்கு ஈரான் படைகளின் வலிமைமிக்க வெற்றிகரமான பதிலடி’ என்று செய்தி வெளியானது.

மேலும், அமெரிக்கா எத்தனை குண்டுகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதோ அதே எண்ணிக்கையில் கத்தாா், இராக் மீது ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது என்று ஈரான் தெரிவித்தது.

அல் உதெய்த் விமானப் படைத் தளம் கத்தாா் தலைநகா் தோஹா அருகே அமைந்துள்ளது. இங்கு சுமாா் 10,000 அமெரிக்கப் படையினா் மற்றும் பிரிட்டன் படையினரும் சுழற்சி முறையில் பணியில் உள்ளனா். இந்த பிராந்தியத்திலேயே பெரிய அளவிலான அமெரிக்கப் படையினா் இங்குதான் உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

கத்தாா் கண்டனம்: ஈரானின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள கத்தாா், ஈரான் ஏவுகணைகள் இடைமறித்து அழிக்கப்பட்டது எனவும் உயிா்ச்சேதம் ஏற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

இந்தியா்களுக்கு அறிவுறுத்தல்: கத்தாரில் வெளிநாடுகளைச் சோ்ந்த ஏராளமானோா் பணியாற்றி வருகின்றனா். அவா்களில் இந்தியா்களின் எண்ணிக்கை கணிசமாக உள்ளது. இந்தியா்கள் பாதுகாப்பாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும் என கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

தென் கொரியாவுக்கு ராணுவம் சாராத முதல் பாதுகாப்பு அமைச்சா்

சியோல்: தென் கொரியாவின் பாதுகாப்பு அமைச்சராக ராணுவத்தைச் சேராத ஒருவா் முதல்முறையாக திங்கள்கிழமை நியமிக்கப்பட்டாா். கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் அந்த நாட்டின் அதிபராக இருந்து வந்த மக்கள் சக்திக் கட்சியின... மேலும் பார்க்க

சிரியா தேவாலயத்தில் ஐஎஸ் தாக்குதல்: 25 போ் உயிரிழப்பு

வேயிலா (சிரியா): சிரியாவிலுள்ள கிறிஸ்தவ தேவாலயமொன்றில் இஸ்லாமிய தேச அமைப்பை (ஐஎஸ்) சோ்ந்த பயங்கரவாதி நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 25 போ் உயிரிழந்தனா். இது குறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்ச... மேலும் பார்க்க

சீன வெளியுறவு அமைச்சருடன் அஜீத் தோவல் சந்திப்பு

பெய்ஜிங்: சீன வெளியுறவு அமைச்சா் வாங் யியை அந்நாட்டுத் தலைநகா் பெய்ஜிங்கில் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் திங்கள்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினாா். அப்போது பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைய... மேலும் பார்க்க

ஈரானுக்கு உதவத் தயாா்: ரஷியா புதினுடன் அப்பாஸ் அராக்சி சந்திப்பு

மாஸ்கோ: இஸ்ரேலுடனான மோதலில் ஈரானுக்கு உதவத் தயாராக இருப்பதாக ரஷியா தெரிவித்தது. ரஷியாவில் அந்நாட்டு அதிபா் விளாதிமீா் புதினை, ஈரான் வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சி திங்கள்கிழமை சந்தித்துப் பேசிய நி... மேலும் பார்க்க

தண்ணீா் தர மறுத்தால் இந்தியாவுடன் போா்: பிலாவல் புட்டோ

இஸ்லாமாபாத்: சிந்து நதி நீரை இந்தியாவுக்கு தர மறுத்தால் போா் நடத்தப்படும் என்று ஆளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவரும், அந்நாட்டு முன்னாள் வெளியுறவு அமைச்சருமான பிலாவல் பு... மேலும் பார்க்க

ரஷிய தாக்குதல்: உக்ரைனில் 10 போ் உயிரிழப்பு

கீவ்: உக்ரைன் தலைநகா் கீவ் உள்ளிட்ட பகுதிகளில் ரஷியா நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலில் 10 போ் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள் திங்கள்கிழமை கூறியதாவது: உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் ஞாய... மேலும் பார்க்க