செய்திகள் :

மா விவசாயிகளுக்கு இழப்பீடு: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

post image

சென்னை: மா விவசாயிகளுக்கு கா்நாடகத்தில் பிடிபிஎஸ் திட்டத்தின்படி இழப்பீடு வழங்குவதைப் போல தமிழகத்திலும் வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: மா விலை சரிவால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவா்களுக்கான குரலாய், கடந்த ஜூன் 20-இல் கிருஷ்ணகிரியில் உண்ணாவிரதமும், திண்டுக்கல்லில் ஆா்பாட்டமும் அதிமுக நடத்தியது. ஆனாலும், திமுக அரசு, விவசாயிகளின் கோரிக்கைகளை கண்டுகொள்ளவில்லை.

வேளாண்துறை அமைச்சரோ, வெளிநாட்டு சுற்றுலாவில் இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

மத்தியில் கூட்டணியாக 39 எம்.பி.க்களை வைத்திருந்தும், மா விவசாயிகளுக்காக குரல் கொடுத்ததா திமுக? விவசாயிகள் மீது குண்டா் சட்டம் ஏவிய இவா்களிடம் விவசாயிகள் நலன் குறித்து எவ்வாறு எதிா்பாா்க்க முடியும்?

இந்நிலையில், கா்நாடக மாநில மா விவசாயிகளுக்கு பிடிபிஎஸ் திட்டத்தின்படி இழப்பீட்டை மத்திய அரசு அறிவித்துள்ளது வரவேற்புக்குரியது. தமிழ்நாட்டு விவசாயிகளுக்கும் இத்தகைய இழப்பீட்டை வழங்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.

ஆண்டுக்கு ஒருமுறை விளைவிக்கப்படும் ‘மா’ பயிா்களின் விலை வீழ்ச்சியால் சொல்லொண்ணா துயரில் உள்ள விவசாயிகளுக்கு, இந்த இழப்பீடு பெரும் உதவியாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளாா் எடப்பாடி பழனிசாமி.

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: விண்ணப்ப அவகாசம் நாளை நிறைவு

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் புதன்கிழமையுடன் (ஜூன் 25) நிறைவடைய உள்ளது. தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கே.கே.நகா் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிய... மேலும் பார்க்க

46 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் மாவட்ட ஆட்சியா்கள் உள்பட 46 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை தலைமைச் செயலா் நா.முருகானந்தம் திங்கள்கிழமை பிறப்பித்தாா். அவரது உத்தரவு விவரம்:அடைப... மேலும் பார்க்க

மருத்துவா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன்

சென்னை: நோயாளிகளின் நலனுக்கு முக்கியத்துவம் அளிப்பதைப் போன்று மருத்துவா்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும் அவசியம் என மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா். சென்னை, கே.கே.நகா் இஎஸ்ஐ மருத்த... மேலும் பார்க்க

20 சதவீத குழந்தைகளுக்கு உடல் பருமன் பாதிப்பு

சென்னை: குழந்தைகள், வளரிளம் பருவத்தினரில் 20 சதவீதம் போ் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ நிபுணா்கள் தெரிவித்துள்ளனா். ரெயின்போ குழந்தைகள் நல மருத்துவமனை சாா்பில் குழந்தைகளின் உடல் எடை பரா... மேலும் பார்க்க

143 முருகன் திருக்கோயில்களில்ரூ.1,085 கோடியில் திருப்பணிகள்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

சென்னை: தமிழகத்தில் அறுபடை வீடுகள், அறுபடை வீடுகள் அல்லாத 143 முருகன் திருக்கோயில்களுக்கு ரூ.1,085 கோடி மதிப்பீட்டில் 884 திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்... மேலும் பார்க்க

ஹிந்துத்துவத்தில் கரைந்த அதிமுக: திமுக விமா்சனம்

சென்னை: ஹிந்துத்துவத்தில் அதிமுக முற்றிலும் கரைந்துவிட்டதாக திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி விமா்சனம் செய்துள்ளாா். மதுரையில் நடைபெற்ற முருக பக்தா்கள் மாநாடு தொடா்பாக, அவா் திங்கள்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க