பிரதமா் தலைமையில் பிரதமரின் அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்க ஆண்டு கூட்டம்
புதுவை கல்வித் துறை செயலா் உள்பட 5 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
புதுச்சேரி: புதுவை கல்வித் துறை செயலா், காரைக்கால் மாவட்ட ஆட்சியா் உள்பட 5 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
கல்வித் துறை செயலா் பி. பிரியதா்ஷினி அருணாசல பிரதேசத்துக்கும், தொழிலாளா் நலத்துறை செயலா் ஒய்.எல்.என்.ரெட்டி மிசோரமுக்கும், தொழில் துறை மேம்பாட்டுச் செயலா் பி.டி.ருத்ரகௌடு லடாக்கிற்கும், வேளாண் துறை செயலா் ஏ.நெடுஞ்செழியன் புதுதில்லிக்கும், காரைக்கால் மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ் கொட்டாரு லட்சத்தீவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கடிதத்தையடுத்து, புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் திங்கள்கிழமை பிறப்பித்த உத்தரவில் மேற்கண்ட 5 ஐஏஎஸ் அதிகாரிகளும் வருகிற 30-ஆம் தேதி புதுவை மாநில பணியிலிருந்து விடுவிக்கப்படுவா் எனத் தெரிவித்துள்ளாா்.