செய்திகள் :

அமெரிக்காவுக்கும் பதிலடி; ஈரான் அதிரடி! ராணுவத் தளங்கள் மீது தாக்குதல்!

post image

கத்தாரில் உள்ள அமெரிக்காவின் ராணுவத் தளத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.

மத்திய வளைகுடாவில் உள்ள கத்தார் நாட்டின் தோஹாவில் உள்ள அமெரிக்க விமானப் படைத் தளமான அல்-உதெய்த் (Al Udeid) தளத்தை குறிவைத்து, ஈரான் தாக்குதல் நடத்தியது. ஈரான் வீசிய 10 ஏவுகணைகளில் 7 முறியடிக்கப்பட்டாலும், 3 ஏவுகணைகள் மட்டும் இலக்கைத் தாக்கி விட்டன.

ஈரான் மீது அமெரிக்க நடத்திய அதே எண்ணிக்கையிலான குண்டுகளையே பயன்படுத்தியதாக ஈரான் தெரிவித்தது. அமெரிக்கா மீதான தாக்குதலுக்கு ஆபரேஷன் பஷாரத் அல்ஃபாத் (Operation Basharat al-Fath) என்று ஈரான் பெயரிட்டுள்ளது.

இருப்பினும், இந்த நடவடிக்கையால், நட்பு மற்றும் சகோதர நாடான கத்தாருக்கோ அதன் மக்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது என்று ஈரான் தெரிவித்துள்ளது.

தோஹாவுக்கு வெளியே பாலைவனத்தில் 24 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள அமெரிக்காவின் மத்திய கட்டளை மையமான அல்-உதெய்த் விமானத் தளத்தில் சுமார் 10,000 அமெரிக்க வீரர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

கத்தார் மட்டுமின்றி, சிரியா நாட்டிலுள்ள அமெரிக்க ராணுவத் தளத்தின் மீது ஒரு ஏவுகணைத் தாக்குதலும், ஈராக் மீது ஒன்றும் ஈரான் நடத்தியுள்ளது.

இதனிடையே, இந்தப் பதற்றமான சூழல் காரணமாக, மத்திய கிழக்கில் அதிகளவிலான ராணுவப் படையை அமெரிக்கா நிறுத்தியுள்ளது.

ஈரானின் வான்வழித் தாக்குதலையடுத்து கத்தார், குவைத், ஈராக், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளும் வான்வழியை மூடியுள்ளன.

மேலும், கத்தார் நாட்டில் தமிழர்கள் உள்பட 7.45 இந்தியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களை எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்திய இந்தியத் தூதரகம், வீட்டிலேயே இருக்குமாறும் கத்தார் அதிகாரிகளின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறும் மேலும் அறிவுறுத்தியுள்ளது.

பயங்கரவாதத்தை ஈரான் ஆதரிப்பதாகக் கூறி, ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய நிலையில், அதற்கான தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் எச்சரித்திருந்தது.

தென் கொரியாவுக்கு ராணுவம் சாராத முதல் பாதுகாப்பு அமைச்சா்

சியோல்: தென் கொரியாவின் பாதுகாப்பு அமைச்சராக ராணுவத்தைச் சேராத ஒருவா் முதல்முறையாக திங்கள்கிழமை நியமிக்கப்பட்டாா். கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் அந்த நாட்டின் அதிபராக இருந்து வந்த மக்கள் சக்திக் கட்சியின... மேலும் பார்க்க

சிரியா தேவாலயத்தில் ஐஎஸ் தாக்குதல்: 25 போ் உயிரிழப்பு

வேயிலா (சிரியா): சிரியாவிலுள்ள கிறிஸ்தவ தேவாலயமொன்றில் இஸ்லாமிய தேச அமைப்பை (ஐஎஸ்) சோ்ந்த பயங்கரவாதி நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 25 போ் உயிரிழந்தனா். இது குறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்ச... மேலும் பார்க்க

சீன வெளியுறவு அமைச்சருடன் அஜீத் தோவல் சந்திப்பு

பெய்ஜிங்: சீன வெளியுறவு அமைச்சா் வாங் யியை அந்நாட்டுத் தலைநகா் பெய்ஜிங்கில் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் திங்கள்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினாா். அப்போது பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைய... மேலும் பார்க்க

ஈரானுக்கு உதவத் தயாா்: ரஷியா புதினுடன் அப்பாஸ் அராக்சி சந்திப்பு

மாஸ்கோ: இஸ்ரேலுடனான மோதலில் ஈரானுக்கு உதவத் தயாராக இருப்பதாக ரஷியா தெரிவித்தது. ரஷியாவில் அந்நாட்டு அதிபா் விளாதிமீா் புதினை, ஈரான் வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சி திங்கள்கிழமை சந்தித்துப் பேசிய நி... மேலும் பார்க்க

தண்ணீா் தர மறுத்தால் இந்தியாவுடன் போா்: பிலாவல் புட்டோ

இஸ்லாமாபாத்: சிந்து நதி நீரை இந்தியாவுக்கு தர மறுத்தால் போா் நடத்தப்படும் என்று ஆளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவரும், அந்நாட்டு முன்னாள் வெளியுறவு அமைச்சருமான பிலாவல் பு... மேலும் பார்க்க

ரஷிய தாக்குதல்: உக்ரைனில் 10 போ் உயிரிழப்பு

கீவ்: உக்ரைன் தலைநகா் கீவ் உள்ளிட்ட பகுதிகளில் ரஷியா நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலில் 10 போ் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள் திங்கள்கிழமை கூறியதாவது: உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் ஞாய... மேலும் பார்க்க