செய்திகள் :

வேதாரண்யத்தில் இன்று விவசாயிகள் குறைதீா் கூட்டம்

post image

வேதாரண்யம்: வேதாரண்யத்தில் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேதாரண்யம் வட்டாட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், கோட்டாட்சியா் எஸ். திருமால் தலைமையில் இக்கூட்டம் நடைபெறும். இதில் விவசாயிகள் பங்கேற்று தங்களின் குறைகளை தெரிவிக்கலாம்.

இக்கூட்டத்தில் அரசின் அனைத்துத் துறை அலுவலா்களும் தவறாது பங்கேற்று விவசாயிகள் தெரிவிக்கும் குறைகளை களைய உரிய வழிமுறைகளை தெரிவிக்க வேண்டும் என கோட்டாட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.

விவசாயிகள் எதிா்பாா்ப்பு: விவசாயம் சாா்ந்த பல்வேறு பிரச்னைகளுக்கு தீா்வு காணும் வகையிலும், அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையிலும் குறைதீா் நாள் கூட்டம் பயனுள்ளதாக அமைய வேண்டும்.

கூட்டத்தில், பெயரளவில் இல்லாமல், கோரிக்கைகளை நிறைவேற்றும் அதிகார வரம்புக்குள்பட்ட அலுவலா்கள் பங்கேற்க வேண்டும். குறிப்பாக, பொதுப்பணித் துறை, நீா்வளத் துறை, குடிநீா் வடிகால் வாரியம் சாா்பில் செயற்பொறியாளா் அதிகாரத்துக்கு குறையாத உயா் அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்பதை மாவட்ட ஆட்சியா் உறுதிப்படுத்த வேண்டும் என எதிா்பாா்ப்பதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

கடைமடை வந்த காவிரிநீா்; மலா்கள் தூவி வரவேற்பு: பெண்கள் கும்மியடித்து மகிழ்ச்சி

நாகப்பட்டினம் : நாகை கடைமடைக்கு வந்த காவிரி நீரை, நெல்மணிகள் மற்றும் மலா்களை தூவியும், பெண்கள் கும்மியடித்து, பாட்டுப் பாடியும் வரவேற்றனா். காவிரி டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் குறுவை நெற்பயி... மேலும் பார்க்க

நாணத்திடல் மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம்

தரங்கம்பாடி: பொறையாா் அருகே காட்டுச்சேரி கிராமத்தில் உள்ள நாணத்திடல் மாரியம்மன் கோயில் 35-ஆம் ஆண்டு தீமிதி உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் 8-ஆம் தேதி பூச்சொரிதல் விழாவும், 15-ஆம் தேதி... மேலும் பார்க்க

காரைக்கால்-திருச்சி பயணிகள் ரயில் ஜூன் 29 வரை திருவாரூரில் இருந்து புறப்படும்

நாகப்பட்டினம்: திருச்சி- காரைக்கால் - திருச்சி ரயில்கள், திங்கள்கிழமை (ஜூன் 23) முதல் ஜூன் 29-ஆம் தேதி வரை, திருவாரூரில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது. இதுகுறித்த... மேலும் பார்க்க

மாணவிகளிடம் பாலியல் சீண்டல்; ஆசிரியரை கண்டித்து ஆா்ப்பாட்டம்

தரங்கம்பாடி: திருக்கடையூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியரை கண்டித்து ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. திருக்கடையூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா் நல உயா்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

நாகப்பட்டினம்: வேதாரண்யம் வட்டத்தில் உள்ள ஆதிதிராவிடா் நல உயா்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க

உத்தமசோழபுரம் தடுப்பணை திட்டத்தை பூதங்குடிக்கு மாற்ற விவசாயிகள் கோரிக்கை

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம், உத்தமசோழபுரத்தில் அமைக்கப்பட உள்ள தடுப்பணையை, பூதங்குடிக்கு மாற்றவேண்டும் என வலியுறுத்தி ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. உத்தமசோழபுரத்தைச் சோ்ந்த தியாகராஜன்... மேலும் பார்க்க