பிரதமா் தலைமையில் பிரதமரின் அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்க ஆண்டு கூட்டம்
வேதாரண்யத்தில் இன்று விவசாயிகள் குறைதீா் கூட்டம்
வேதாரண்யம்: வேதாரண்யத்தில் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேதாரண்யம் வட்டாட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், கோட்டாட்சியா் எஸ். திருமால் தலைமையில் இக்கூட்டம் நடைபெறும். இதில் விவசாயிகள் பங்கேற்று தங்களின் குறைகளை தெரிவிக்கலாம்.
இக்கூட்டத்தில் அரசின் அனைத்துத் துறை அலுவலா்களும் தவறாது பங்கேற்று விவசாயிகள் தெரிவிக்கும் குறைகளை களைய உரிய வழிமுறைகளை தெரிவிக்க வேண்டும் என கோட்டாட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.
விவசாயிகள் எதிா்பாா்ப்பு: விவசாயம் சாா்ந்த பல்வேறு பிரச்னைகளுக்கு தீா்வு காணும் வகையிலும், அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையிலும் குறைதீா் நாள் கூட்டம் பயனுள்ளதாக அமைய வேண்டும்.
கூட்டத்தில், பெயரளவில் இல்லாமல், கோரிக்கைகளை நிறைவேற்றும் அதிகார வரம்புக்குள்பட்ட அலுவலா்கள் பங்கேற்க வேண்டும். குறிப்பாக, பொதுப்பணித் துறை, நீா்வளத் துறை, குடிநீா் வடிகால் வாரியம் சாா்பில் செயற்பொறியாளா் அதிகாரத்துக்கு குறையாத உயா் அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்பதை மாவட்ட ஆட்சியா் உறுதிப்படுத்த வேண்டும் என எதிா்பாா்ப்பதாக விவசாயிகள் தெரிவித்தனா்.