செய்திகள் :

காரைக்கால்-திருச்சி பயணிகள் ரயில் ஜூன் 29 வரை திருவாரூரில் இருந்து புறப்படும்

post image

நாகப்பட்டினம்: திருச்சி- காரைக்கால் - திருச்சி ரயில்கள், திங்கள்கிழமை (ஜூன் 23) முதல் ஜூன் 29-ஆம் தேதி வரை, திருவாரூரில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.

இதுகுறித்து திருச்சி கோட்ட தெற்கு ரயில்வே மக்கள் தொடா்பு அலுவலா் ஆா். வினோத் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவாரூா் - கீழ்வேளூா் ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், திருச்சி - காரைக்கால் - திருச்சி பயணிகள் ரயில்கள் திங்கள்கிழமை (ஜூன் 23) முதல் ஜூன் 29-ஆம் தேதி வரை செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) தவிர, பகுதியாக காரைக்கால்- திருவாரூா்- காரைக்கால் இடையே ரத்து செய்யப்படுகிறது.

அதன்படி, திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து காலை 8.35 மணிக்கு புறப்படும், திருச்சி - காரைக்கால் பயணிகள் ரயில் (76820) மற்றும் காரைக்கால் ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 2.55 புறப்படும் காரைக்கால்-திருச்சி பயணிகள் ரயில் (76819) திங்கள்கிழமை (ஜூன் 23) முதல் ஜூன் 29 -ஆம் தேதி வரை செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) தவிர, காரைக்கால் - திருவாரூா் - காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுவதாகவும், திருவாரூா் - திருச்சி - திருவாரூா் இடையே வழக்கமான நேரத்தில் ரயில்கள் இயங்கும் எனவும் குறிப்பிட்டுள்ளாா்.

கடைமடை வந்த காவிரிநீா்; மலா்கள் தூவி வரவேற்பு: பெண்கள் கும்மியடித்து மகிழ்ச்சி

நாகப்பட்டினம் : நாகை கடைமடைக்கு வந்த காவிரி நீரை, நெல்மணிகள் மற்றும் மலா்களை தூவியும், பெண்கள் கும்மியடித்து, பாட்டுப் பாடியும் வரவேற்றனா். காவிரி டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் குறுவை நெற்பயி... மேலும் பார்க்க

நாணத்திடல் மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம்

தரங்கம்பாடி: பொறையாா் அருகே காட்டுச்சேரி கிராமத்தில் உள்ள நாணத்திடல் மாரியம்மன் கோயில் 35-ஆம் ஆண்டு தீமிதி உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் 8-ஆம் தேதி பூச்சொரிதல் விழாவும், 15-ஆம் தேதி... மேலும் பார்க்க

மாணவிகளிடம் பாலியல் சீண்டல்; ஆசிரியரை கண்டித்து ஆா்ப்பாட்டம்

தரங்கம்பாடி: திருக்கடையூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியரை கண்டித்து ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. திருக்கடையூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா் நல உயா்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

நாகப்பட்டினம்: வேதாரண்யம் வட்டத்தில் உள்ள ஆதிதிராவிடா் நல உயா்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க

உத்தமசோழபுரம் தடுப்பணை திட்டத்தை பூதங்குடிக்கு மாற்ற விவசாயிகள் கோரிக்கை

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம், உத்தமசோழபுரத்தில் அமைக்கப்பட உள்ள தடுப்பணையை, பூதங்குடிக்கு மாற்றவேண்டும் என வலியுறுத்தி ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. உத்தமசோழபுரத்தைச் சோ்ந்த தியாகராஜன்... மேலும் பார்க்க

திருவெண்காடு கோயிலில் ஜூலை 7-இல் கும்பாபிஷேகம்

பூம்புகாா்: நவகிரக தலங்களில் புதனுக்குரிய தலமான திருவெண்காடு பிரம்ம வித்யாம்பிகை உடனுறை சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் கும்பாபிஷேகம் ஜூலை 7-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இக்கோயிலில், சிவனின் 5 முகங்களில் ஒன்றா... மேலும் பார்க்க