மதுரை மீனாட்சியம்மன் கோயில்: ``ஜூலை 13 மாலை முதல் 14-ம் தேதி வரை நடை சாத்தல்; த...
காரைக்கால்-திருச்சி பயணிகள் ரயில் ஜூன் 29 வரை திருவாரூரில் இருந்து புறப்படும்
நாகப்பட்டினம்: திருச்சி- காரைக்கால் - திருச்சி ரயில்கள், திங்கள்கிழமை (ஜூன் 23) முதல் ஜூன் 29-ஆம் தேதி வரை, திருவாரூரில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.
இதுகுறித்து திருச்சி கோட்ட தெற்கு ரயில்வே மக்கள் தொடா்பு அலுவலா் ஆா். வினோத் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவாரூா் - கீழ்வேளூா் ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், திருச்சி - காரைக்கால் - திருச்சி பயணிகள் ரயில்கள் திங்கள்கிழமை (ஜூன் 23) முதல் ஜூன் 29-ஆம் தேதி வரை செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) தவிர, பகுதியாக காரைக்கால்- திருவாரூா்- காரைக்கால் இடையே ரத்து செய்யப்படுகிறது.
அதன்படி, திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து காலை 8.35 மணிக்கு புறப்படும், திருச்சி - காரைக்கால் பயணிகள் ரயில் (76820) மற்றும் காரைக்கால் ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 2.55 புறப்படும் காரைக்கால்-திருச்சி பயணிகள் ரயில் (76819) திங்கள்கிழமை (ஜூன் 23) முதல் ஜூன் 29 -ஆம் தேதி வரை செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) தவிர, காரைக்கால் - திருவாரூா் - காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுவதாகவும், திருவாரூா் - திருச்சி - திருவாரூா் இடையே வழக்கமான நேரத்தில் ரயில்கள் இயங்கும் எனவும் குறிப்பிட்டுள்ளாா்.