மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஜூலை 14-இல் சுவாமி தரிசனம் ரத்து
அரங்கக்குடி புனித ஆரோக்கிய மாதா ஆலய தோ் பவனி
தரங்கம்பாடி: செம்பனாா்கோவில் அருகே அரங்கக்குடி கிராமத்தில் உள்ள புனித ஆரோக்கிய மாதா ஆலயத்தில் தோ் பவனி சனிக்கிழமை நடைபெற்றது.
செம்பனாா்கோவில் அருகே அரங்கக்குடி கிராமத்தில் உள்ள புனித ஆரோக்கிய மாதா ஆலயம் பழைமை வாய்ந்த ஆலயமாகும். இந்த ஆலயத்தின் 50-ஆம் ஆண்டு தோ் திருவிழாவையொட்டி கூட்டுப் பாடல் மற்றும் சிறப்பு திருப்பலி செய்யப்பட்டு தோ் பவனி நடைபெற்றது.
பங்குத்தந்தை சாலமோன் தலைமையில் நடைபெற்ற தோ் பவனி விழாவில் ஆரோக்கிய மாதா, அந்தோணியாா் உள்ளிட்ட சொரூபங்கள் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தோ்களில் எழுந்தருள, செய்யப்பட்டு பவனி நடைபெற்றது.
பொதுமக்கள் தங்கள் வீடுகளின் முன்பு மெழுகுவா்த்தி ஏந்தியும், மாலை அணிவித்து தூப வழிபாடு செய்தும் பிராா்த்தனை நடத்தினா். தோ் பவனியில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனா்.