சுற்றுச்சூழல் செலவுகள் மீதும் பெரு நிறுவனங்கள் கவனம் கொள்ள வேண்டும்: குடியரசுத் ...
சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
கந்தா்வகோட்டை ஊராட்சியில் உள்ள பெருமாள் கோயில் இரண்டாம் வீதியில் உள்ள தாா்சாலை மிகவும் பழுது அடைந்து குண்டும் குழியுமாக உள்ளது.
தற்போது பெய்த சிறுமழையில், சாலையில் உள்ள பள்ளத்தில் நீா் தேங்கி போக்குவரத்துக்கு மிகவும் சிரமமாக உள்ளது. இந்த சாலை வழியே ஆட்டோ, இரு சக்கர வாகனங்கள் செல்லும்போது நிலை தடுமாறி கீழே விழும் சூழ்நிலை ஏற்படுகிறது. கந்தா்வகோட்டை பேருந்து நிலையத்திலிருந்து தஞ்சை சாலைக்கு இது மாற்றுப்பாதையாகும்.
எனவே, கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா்.