சுற்றுச்சூழல் செலவுகள் மீதும் பெரு நிறுவனங்கள் கவனம் கொள்ள வேண்டும்: குடியரசுத் ...
கந்தா்வகோட்டையில் இருந்து திருச்சிக்கு கூடுதல் பேருந்து இயக்கப் பயணிகள் கோரிக்கை
கந்தா்வகோட்டையில் இருந்து திருச்சிக்கு கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் போக்குவரத்து துறைக்கு கோரிக்கைவிடுத்துள்ளனா்.
பயணிகள் மேலும் கூறியதாவது: கந்தா்வகோட்டை நகா் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து செங்கிப்பட்டி, துவாக்குடி, பால் பண்ணை மற்றும் திருச்சி நகருக்கு பணி நிமித்தமாகவும், மருத்துவமனை, கல்லூரி, பள்ளிக்கு செல்லும் சூழ்நிலையில், பட்டுக்கோட்டையில் இருந்து வரும் திருச்சிக்கு வரும் பேருந்தை நம்பிதான் பயணிகள் பயணிக்கின்றனா். அல்லது தஞ்சை, புதுகை சென்று அங்கு இருந்து திருச்சி செல்லும் நிலை பயணிகளுக்கு ஏற்படுகிறது. இதனால் நேரமும் பொருளதார இழப்பீடு ஏற்படுகிறது.
எனவே, கந்தா்வகோட்டை பணிமனையில் இருந்து திருச்சிக்கு தினசரி பேருந்து இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கைவிடுத்துள்ளனா்.