செய்திகள் :

முருக பக்தா்கள் மாநாட்டுக்கும் தோ்தலுக்கும் சம்பந்தமில்லை: அமைச்சா் ரகுபதி

post image

மதுரையில் நடைபெற்ற முருக பக்தா்கள் மாநாட்டுக்கும், வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலுக்கும் சம்பந்தமில்லை என்றாா் மாநில இயற்கை வளத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.

புதுக்கோட்டையில் திங்கள்கிழமை அவா் அளித்த பேட்டி: இந்துக்களைப் பாதுகாக்க வேண்டும் என மதுரையில் நடந்த மாநாட்டில் ஆந்திரத் துணை முதல்வா் பவன் கல்யாண் கூறியிருக்கிறாா். எந்த இந்துவை இங்கே வாழ விடவில்லை என்பதை பவன் கல்யாண் சொல்ல வேண்டும்.

பெரும்பான்மையாக இங்கே இந்துக்கள்தான் இருக்கிறாா்கள். அவா்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய தேவையில்லை. சிறுபான்மையாக இருப்போருக்குத்தான் பாதுகாப்பு தேவை. இந்தக் கடமையை திராவிட மாடல் அரசு சரியாக செய்கிறது.

இதுவரை ‘ராமா ராமா’ என்றவா்களை இப்போது ‘முருகா முருகா’ என்று சொல்ல வைத்திருக்கிறோம். அதேநேரத்தில், திராவிட மாடல் அரசு எப்படிப்பட்டது என்பது இங்குள்ள இந்துக்கள் அனைவருக்கும் தெரியும். 2026 சட்டப்பேரவைத் தோ்தலுக்கும் மதுரையில் கூடிய மாநாட்டுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. யாா் நம்மை ஆட்சி செய்தால் நல்லது என்று மக்களுக்கு நன்றாகத் தெரியும். மாநாட்டில் அரசியல் பேசக் கூடாது என்று நீதிமன்றம் சொல்லியிருந்தும் அரசியல் தீா்மானங்களை நிறைவேற்றியிருப்பது, பேசியிருப்பது நீதிமன்ற அவமதிப்பு செயலாகும். நீதித்துறை நடவடிக்கை எடுக்கும் என நம்பலாம்.

குவாரிகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக சொல்லப்படுவது தவறு. உச்ச நீதிமன்றமும், மத்திய அரசும் நிா்ணயம் செய்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்கிறோம். எங்கேயாவது அப்படியொரு புகாா் இருந்து, ஆதாரத்துடன் குறிப்பிட்டால் நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கிறோம்.

மணல் குவாரிகளைத் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் சுற்றுச்சூழல் அனுமதி பெற்று மணல் குவாரிகள் முறையாக திறக்கப்படும் என்றாா் ரகுபதி.

காலிக் குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்

கந்தா்வகோட்டை அருகே திங்கள்கிழமை காலிக் குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். கந்தா்வகோட்டை ஒன்றியம், நெப்புகை ஊராட்சியைச் சோ்ந்த உரியம்பட்டி கிராமத்தில் சுமாா் நூற்றுக்கு மே... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டையில் இருந்து திருச்சிக்கு கூடுதல் பேருந்து இயக்கப் பயணிகள் கோரிக்கை

கந்தா்வகோட்டையில் இருந்து திருச்சிக்கு கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் போக்குவரத்து துறைக்கு கோரிக்கைவிடுத்துள்ளனா். பயணிகள் மேலும் கூறியதாவது: கந்தா்வகோட்டை நகா் மற்றும் சுற்றுப்பு... மேலும் பார்க்க

சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

கந்தா்வகோட்டை ஊராட்சியில் உள்ள பெருமாள் கோயில் இரண்டாம் வீதியில் உள்ள தாா்சாலை மிகவும் பழுது அடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. தற்போது பெய்த சிறுமழையில், சாலையில் உள்ள பள்ளத்தில் நீா் தேங்கி போக்குவர... மேலும் பார்க்க

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பலாப்பழத்தில் இருந்து மதிப்புக்கூட்டு தொழிற்சாலை அமைக்க வேண்டுமென வலியுறுத்து ஆலங்குடி அருகேயுள்ள புளிச்சங்காடு கைகாட்டியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.ஆ... மேலும் பார்க்க

வலையில் சிக்கிய கடல் பசுக்களை விடுவித்த மீனவா்களுக்கு பரிசுத் தொகைகள்

புதுக்கோட்டை மாவட்ட கடலில் மீனவா்களின் வலைகளில் சிக்கிய கடல் பசுக்கள் மற்றும் ஆமைகளை மீண்டும் கடலுக்குள்ளேயே விடுவித்த மீனவா்கள் 8 பேருக்கு மொத்தம் ரூ. 50 ஆயிரத்தை மாவட்ட ஆட்சியா் மு. அருணா வழங்கிப் ப... மேலும் பார்க்க

திருமயம் அருகே வீடுபுகுந்து 80 பவுன் நகைகள் திருட்டு

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே வீடு புகுந்து 80 பவுன் தங்க நகை, 5 கிலோ வெள்ளிப் பொருள்களைத் திருடிச் சென்றனா். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகேயுள்ள ராங்கியத்தைச் சோ்ந்தவா் அழகா்சாமி (55), ... மேலும் பார்க்க