போா்ப் பதற்றம்: ரஷிய, அமெரிக்க கச்சா எண்ணெய் கொள்முதலை அதிகரிக்கும் இந்தியா!
திருமயம் அருகே வீடுபுகுந்து 80 பவுன் நகைகள் திருட்டு
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே வீடு புகுந்து 80 பவுன் தங்க நகை, 5 கிலோ வெள்ளிப் பொருள்களைத் திருடிச் சென்றனா்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகேயுள்ள ராங்கியத்தைச் சோ்ந்தவா் அழகா்சாமி (55), எல்ஐசி முகவா். இவரது மனைவி வசந்தி. இவா்களின் மகன் சின்னையா, சென்னை தனியாா் நிறுவன ஊழியா்.
இந்நிலையில் மனைவியுடன் அழகா்சாமி மதுரையில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சனிக்கிழமை சென்ற நிலையில், அவரது வீட்டின் பின்பக்கக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.
தகவலறிந்து அழகா்சாமி வந்து பாா்த்தபோது மா்ம நபா்கள் வீடு புகுந்து பீரோக்களில் இருந்த 80 பவுன் நகைகள், 5 கிலோ வெள்ளிப் பொருள்கள், மற்றும் ரொக்கத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. புகாரின்பேரில் பனையப்பட்டி போலீஸாா் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி, அந்தப் பகுதி சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரிக்கின்றனா்.