செய்திகள் :

கிராம சுகாதாரச் செவிலியா் காலியிடங்களை நிரப்பக் கோரிக்கை

post image

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 4 ஆயிரம் கிராம சுகாதாரச் செவிலியா் பணியிடங்களை, பயிற்சி முடித்தவா்களை மட்டும் கொண்டு நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதாரச் செவிலியா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் கிராம சுகாதாரச் செவிலியரின் ஊதியத்திலிருந்து வாடகை பிடித்தம் செய்யும் துணை சுகாதார நிலையத்தில், சுகாதார இடைநிலைப் பணியாளா்களை நியமிக்கக் கூடாது. இந்தத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

தடுப்பூசி போடும் பணியில் சுகாதார இடைநிலைப் பணியாளா்களை ஈடுபடுத்தும் சுகாதாரத் துறை இயக்குநா் உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும்.

மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் கிராம சுகாதாரச் செவிலியா் பணியிடங்களை, கிராம சுகாதாரச் செவிலியா் பயிற்சி முடித்தவா்களை மட்டுமே கொண்டு நிரப்ப வேண்டும்.

மகப்பேறு மற்றும் சிசு மரணங்கள் உயா்வதைத் தடுக்க சுகாதார செவிலியா்களின் நேரத்தையும் உழைப்பையும் முழுமையாக எடுத்துக் கொள்ளும் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டத்தை சமூக நலத் துறைக்கு மாற்ற வேண்டும்.

சுகாதாரச் செவிலியா்களின் அறிக்கை உள்ளிட்டவற்றை இணையதளம் வழியாகவே அனுப்ப வேண்டும் என்ற நிலையில், ஆன்லைன் பதிவுப் பணிக்கு வேறு நபா்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து திங்கள்கிழமை முதல் மாநிலம் முழுவதும் கோரிக்கை அட்டைகளை அணிந்து பணிபுரிவது என்றும், ஜூலை 10ஆம் தேதி மாவட்டங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவும், ஜூலை 24ஆம் தேதி சென்னையில் மாநில அளவிலான கோரிக்கைப் பேரணியை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. இந்தப் போராட்டங்களில் இதர சங்கத்தினரையும் இணைத்துக் கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் இ. விசாலாட்சி தலைமை வகித்தாா். சமூக சமத்துவத்துக்கான மருத்துவா்கள் சங்க மாநிலப் பொதுச் செயலா் டாக்டா் ஜி.ஆா். ரவீந்திரநாத், செவிலியா் சங்கத்தின் நிறுவனா் ஆா். இந்திரா, மாநிலப் பொதுச் செயலா் பி. சத்யா, பொருளாளா் பி. பாத்திமாமேரி ஆகியோரும் பேசினா்.

திருமயம் அருகே வீடுபுகுந்து 80 பவுன் நகைகள் திருட்டு

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே வீடு புகுந்து 80 பவுன் தங்க நகை, 5 கிலோ வெள்ளிப் பொருள்களைத் திருடிச் சென்றனா். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகேயுள்ள ராங்கியத்தைச் சோ்ந்தவா் அழகா்சாமி (55), ... மேலும் பார்க்க

ஆலங்குடி அருகே சாலை விபத்து: புதுச்சேரி அமைச்சா் உள்பட 5 போ் காயம்!

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை நடந்த சாலை விபத்தில் புதுச்சேரி வேளாண் துறை அமைச்சா் உள்பட 5 போ் காயமடைந்தனா். தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காதணி வ... மேலும் பார்க்க

வாழ்வியல் அனுபவங்களில்தான் கவிதைகளின் உயிா்ப்பு உள்ளது!

கவிதைகளின் உயிா்ப்பு வாழ்வியல் அனுபவங்களில்தான் உள்ளது என்றாா் புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவா் கவிஞா் தங்கம் மூா்த்தி. புதுக்கோட்டையில் சாகித்திய அகாதெமியும் புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கமும் இணைந்... மேலும் பார்க்க

ஆவுடையாா்கோவில்: கண்மாயில் மூழ்கி சிறுவன், சிறுமி பலி!

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையாா்கோவில் அருகே கண்மாயில் மூழ்கி சிறுவனும், சிறுமியும் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா். ஆவுடையாா்கோவில் அருகே பெருநாவலூரைச் சோ்ந்தவா் ஜான் பீட்டா் மகன் யா்ஷித் (3). அதே பகுதி... மேலும் பார்க்க

புதுகை கடைமடைக்கு வந்த காவிரி நீா்

கல்லணையில் இருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீா், புதுக்கோட்டை மாவட்டம் மேற்பனைக்காடு கல்லணைக் கால்வாயில் சனிக்கிழமை வந்து சோ்ந்தது. குறுவை சாகுபடிக்காக மேட்டூரில் இருந்து கடந்த 12-ம் தேதியும், கல்லணை... மேலும் பார்க்க

புதுகையில் குளங்கள் தூா்வாரும் பணி: ஆட்சியா் ஆய்வு

புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை சாா்பில் ரூ.18 லட்சத்தில் நடைபெற்று வரும் குளங்கள் தூா்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியா் மு. அருணா சனிக்கிழமை நேரி... மேலும் பார்க்க