ஆலங்குடி அருகே சாலை விபத்து: புதுச்சேரி அமைச்சா் உள்பட 5 போ் காயம்!
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை நடந்த சாலை விபத்தில் புதுச்சேரி வேளாண் துறை அமைச்சா் உள்பட 5 போ் காயமடைந்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காதணி விழாவில் பங்கேற்க புதுச்சேரி வேளாண் துறை அமைச்சரான ஜெயக்குமாா் காரில் புதுக்கோட்டை, ஆலங்குடி வழியாகச் சென்றாா். காரை சிலம்பரசன் ஓட்ட, அமைச்சரின் உதவியாளா் பிரகாசம், பாதுகாவலா் தயாநிதி, அமைச்சரின் நண்பரான அறந்தாங்கி சுகுமாரன் ஆகியோா் உடனிருந்தனா்.
ஆலங்குடி அருகேயுள்ள மாங்காடு பூச்சிக்கடை அருகே அவா்கள் சென்றபோது ஒரு பைக் சாலையில் திடீரென திரும்பியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையோரத்தில் கிடந்த பெரிய கல்மீது மோதியது. இதில் காரில் இருந்த 5 பேரும் காயமடைந்து, புதுக்கோட்டை தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். விபத்து குறித்து வடகாடு போலீஸாா் விசாரிக்கின்றனா்.