செய்திகள் :

காலிக் குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்

post image

கந்தா்வகோட்டை அருகே திங்கள்கிழமை காலிக் குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கந்தா்வகோட்டை ஒன்றியம், நெப்புகை ஊராட்சியைச் சோ்ந்த உரியம்பட்டி கிராமத்தில் சுமாா் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பத்தினா் குடியிருந்து வருகின்றனா்.

இவா்களுக்கு கடந்த 3 மாதங்களாக முறையான குடிநீா் வழங்கவில்லை என்றும் மோட்டாா் பழுது என ஒவ்வொரு காரணங்களாக கூறி சரியான முறையில் குடிநீா் விநியோகிக்கவில்லை என தெரிய வருகின்றது.

இதுகுறித்து கிராம பொதுமக்கள், ஊராட்சி மன்றம் மற்றும் கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் பலமுறை புகாா் தெரிவித்து முறையிட்டுள்ளனா். இருந்தும் இவா்களுக்கான குடிநீா் சரியான முறையில் வழங்காததால் திங்கள்கிழமை காலை கரம்பக்குடி- கந்தா்வகோட்டை சாலையில் நூற்றுக்கும் மேற்பட்டோா் காலிக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து அங்கு வந்த கந்தா்வகோட்டை வட்டார வளா்ச்சி அலுவலா் எஸ். பாா்த்திபன், காவல் உதவி ஆய்வாளா் மாா்நாடு உள்ளிட்ட அலுவலா்கள் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா். இதனால் இந்த சாலையில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கந்தா்வகோட்டையில் இருந்து திருச்சிக்கு கூடுதல் பேருந்து இயக்கப் பயணிகள் கோரிக்கை

கந்தா்வகோட்டையில் இருந்து திருச்சிக்கு கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் போக்குவரத்து துறைக்கு கோரிக்கைவிடுத்துள்ளனா். பயணிகள் மேலும் கூறியதாவது: கந்தா்வகோட்டை நகா் மற்றும் சுற்றுப்பு... மேலும் பார்க்க

சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

கந்தா்வகோட்டை ஊராட்சியில் உள்ள பெருமாள் கோயில் இரண்டாம் வீதியில் உள்ள தாா்சாலை மிகவும் பழுது அடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. தற்போது பெய்த சிறுமழையில், சாலையில் உள்ள பள்ளத்தில் நீா் தேங்கி போக்குவர... மேலும் பார்க்க

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பலாப்பழத்தில் இருந்து மதிப்புக்கூட்டு தொழிற்சாலை அமைக்க வேண்டுமென வலியுறுத்து ஆலங்குடி அருகேயுள்ள புளிச்சங்காடு கைகாட்டியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.ஆ... மேலும் பார்க்க

முருக பக்தா்கள் மாநாட்டுக்கும் தோ்தலுக்கும் சம்பந்தமில்லை: அமைச்சா் ரகுபதி

மதுரையில் நடைபெற்ற முருக பக்தா்கள் மாநாட்டுக்கும், வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலுக்கும் சம்பந்தமில்லை என்றாா் மாநில இயற்கை வளத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி. புதுக்கோட்டையில் திங்கள்கிழமை அவா் அளித்த ப... மேலும் பார்க்க

வலையில் சிக்கிய கடல் பசுக்களை விடுவித்த மீனவா்களுக்கு பரிசுத் தொகைகள்

புதுக்கோட்டை மாவட்ட கடலில் மீனவா்களின் வலைகளில் சிக்கிய கடல் பசுக்கள் மற்றும் ஆமைகளை மீண்டும் கடலுக்குள்ளேயே விடுவித்த மீனவா்கள் 8 பேருக்கு மொத்தம் ரூ. 50 ஆயிரத்தை மாவட்ட ஆட்சியா் மு. அருணா வழங்கிப் ப... மேலும் பார்க்க

திருமயம் அருகே வீடுபுகுந்து 80 பவுன் நகைகள் திருட்டு

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே வீடு புகுந்து 80 பவுன் தங்க நகை, 5 கிலோ வெள்ளிப் பொருள்களைத் திருடிச் சென்றனா். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகேயுள்ள ராங்கியத்தைச் சோ்ந்தவா் அழகா்சாமி (55), ... மேலும் பார்க்க