செய்திகள் :

Vijay Deverakonda: விஜய் தேவரகொண்டா மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் - காரணம் என்ன?

post image

பிரபல தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விஜய் தேவரகொண்டா சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த சூர்யாவின் 'ரெட்ரோ'பட நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார்.

அப்போது பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பேசிய அவர், "பயங்கரவாதிகள் 500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பழங்குடியினர் போல் அறிவை பயன்படுத்தாமல் சண்டை போடுகிறார்கள் எனக் கூறியிருந்தார்.

விஜய் தேவரகொண்டா
விஜய் தேவரகொண்டா

இந்த பேச்சு சர்ச்சையான நிலையில் தெலுங்கானா பழங்குடி வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் கிஷன் ராஜ் சவுகான், விஜய் தேவரகொண்டா மீது ஹைதராபாத்தில் உள்ள எஸ்.ஆர்.நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.

அதில், பழங்குடியினர் குறித்து இழிவான கருத்தை விஜய் தேவரகொண்டா தெரிவித்ததாக புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

இத்தகைய சூழலில் தான் விஜய் தேவரகொண்டா இந்த பேச்சுக்கு வருத்தம் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த பதிவில், “பழங்குடியின சமூகத்தை நான் மிகவும் மதிக்கிறேன். அவர்களைப் புண்படுத்துவது என்னுடைய நோக்கம் கிடையாது.

நான் 'ரெட்ரோ' பட விழாவில் பழங்குடியினர் என்ற வார்த்தையை பயன்படுத்தியது வரலாற்று அகராதியில் இருக்கும் அர்த்தத்தை குறிக்கும் நோக்கில்தான்.

அதாவது பல நூற்றாண்டுகளுக்கு முன்பு மனிதக்குலம் குழுக்களாக இருந்த போது பெரும்பாலும் மோதலில் ஈடுபட்டிருந்தனர். அதைத்தான் குறிப்பிட்டு பேசியிருந்தேனே தவிர பட்டியலிடப்பட்ட பழங்குடியின சமூகத்தை பற்றி நான் பேசவில்லை.

நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருந்தால் அல்லது யாரையேனும் புண்படுத்தியிருந்தால் அதற்காக எனது மனமார்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்திருந்தார்.

விஜய் தேவரகொண்டா
விஜய் தேவரகொண்டா

இருப்பினும் மாநில பழங்குடியின மக்கள் கூட்டு நடவடிக்கைக் குழு தலைவர் நெனாவத் அசோக்குமார், 'விஜய் தேவரகொண்டாவின் பேச்சு பழங்குடியின மக்களை இழிப்படுத்தும் வகையில் உள்ளது' என்று புகார் ஒன்றை அளித்திருந்தார்.

இந்நிலையில் இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் நடிகர் விஜய் தேவரகொண்டா மீது பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Kubera: 'தனுஷிற்கு தேசிய விருது கிடைக்கும், அப்படி கிடைக்கவில்லை என்றால்...' - நடிகர் சிரஞ்சீவி

சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜுனா நடிப்பில் கடந்த ஜூன் 20 ஆம் தேதி 'குபேரா' திரைப்படம் வெளியானது.இந்நிலையில் இப்படத்தின் வெற்றி விழா ஹைதராபாத்தில் நேற்று (ஜூன்22)நடைபெற்றது.... மேலும் பார்க்க

Kubera: 'இதனால்தான் சிரஞ்சீவி சாரை எல்லோருக்கும் பிடிக்கும், கமல் சார் ...'- நெகிழும் நாகர்ஜுனா

சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜுனா நடிப்பில் கடந்த ஜூன் 20 ஆம் தேதி 'குபேரா' திரைப்படம் வெளியானது.தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகியிருக்கிறது.இந்நிலையில் இப்படத்தின் வெற்றி... மேலும் பார்க்க

" குபேரா படத்தில் நம்மால் நடிக்க முடியுமா? என்ற கேள்வி எனக்குள் இருந்தன, ஆனால்.."- ராஷ்மிகா மந்தனா

சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜுனா நடிப்பில் கடந்த ஜூன் 20 ஆம் தேதி 'குபேரா' திரைப்படம் வெளியானது. தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகி இருக்கும் இப்படம் மக்களிடையே வரவேற்பைப் ... மேலும் பார்க்க

HIT 3 கதை விவகாரம்: நானி மற்றும் படக்குழுவினருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

ஹிட் 3 திரைப்பட கதைத் திருட்டு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் நடிகர் நானி மற்றும் திரைப்பட குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஹிட் 3 திரைப்படத்தின் கதை தன்னிடம் இருந்து திருடப்பட்டது என திரைக்கதை ஆச... மேலும் பார்க்க

Kubera: "குபேரா படத்தில் ஹீரோ நான்தான்!" - சக்சஸ் மீட்டில் நாகர்ஜூனா

தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது 'குபேரா'. இந்தப் படத்தை டோலிவுட் இயக்குநர் சேகர் கம்முலா இயக்கியிருக்கிறார். Kubera படத்திற்கு நல்... மேலும் பார்க்க

Kuberaa: "அதுதான் அவருடன் பணியாற்ற விரும்பியதற்கான காரணம்" - இயக்குநர் சேகர் குறித்து ராஷ்மிகா

தனுஷின் 51-வது திரைப்படமான ‘குபேரா’ படம் நேற்று (ஜூன்21) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.இயக்குநர் சேகர் கம்முலா இப்படத்தை இயக்கியிருக்கிறார். ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில... மேலும் பார்க்க