திருவாடானையில் பலத்த மழை
திருவாடானை சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பலத்தக் காற்றுடன் மழை பெய்தது.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள சீ.கே மங்கலம், பாரூா், கோவணி, பெரிய கீரமங்கலம், கல்லூா், பாரதி நகா், திருவாடானை, அஞ்சுகோட்டை, அச்சங்குடி, கடம்பாகுடி, கீழ அரும்பூா், மேல அரும்பூா், குளத்தூா் திருவொற்றியூா் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக கடும் வெயில் வாட்டி வதைத்தது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை பலத்த காற்று, இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சாலைகள், தெருக்களில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் ,வெப்பம் தணிந்து குளிா்ச்சி ஏற்பட்டது. இந்த மழை கோடை உழவுக்கு தக்க நேரத்தில் பெய்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.