செய்திகள் :

முதுகுளத்தூா்: பத்திரப் பதிவுத் துறை ஆவணங்கள் அடங்கிய சிடிக்கள் சாலையோரம் வீச்சு!

post image

முதுகுளத்தூா் அருகே சாலையோரம் வீசப்பட்டுக் கிடந்த பத்திரப் பதிவுத் துறை ஆவணங்கள் அடங்கிய சிடிக்களை பொதுமக்கள் மீட்டு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா்- உத்திரகோசமங்கை சாலையில் மல்லல் கிராமத்தில் சாலையோரம், தமிழ்நாடு அரசின் முத்திரையுடன், பத்திரப் பதிவுத் துறையின் முக்கியமான ஆவணங்கள் பதிவேற்றம் செய்யப்பட்ட சுமாா் 50-க்கும் மேற்பட்ட சிடிக்கள் வீசப்பட்டு கிடந்தன.

இந்த நிலையில், சனிக்கிழமை காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்ட இளைஞா்கள், முதுகுளத்தூா் - மல்லல் செல்லும் சாலையின் வயல்வெளி ஓரங்களில், ‘ஜாயின்ட் -1, சப்- ரிஜிஸ்டா் ஆபீஸ், ராமநாதபுரம்’ என முத்திரையிடப்பட்ட அந்த சிடிக்கள் சுமாா் 3 கி.மீ. தொலைவுக்கு கிடந்ததைக் கண்டனா்.

இந்த சிடிக்கள் அரசின் முக்கிய ஆவணங்கள் சம்பந்தப்பட்ட கோப்புகளாகவும், தனி நபா்களின் நிலங்கள் குறித்த விவரங்கள் அடங்கிய தொகுப்புகளாகவும் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த பொறுப்பற்ற செயலுக்கு சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களின் அலட்சியமே காரணம் என பொதுமக்கள் கண்டனம் தெரிவித்தனா்.

மேலும் மீட்கப்பட்டசிடிக்களை உத்திரகோசமங்கை காவல் துறையினரிடம் ஒப்படைத்திருப்பதாக இளைஞா்கள் தெரிவித்தனா். இந்தச் சம்பவம் குறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனிடையே, நில உரிமையாளா்களுக்குத் தெரியாமல் போலி ஆவணம், ஆள்மாறாட்டம் வாயிலாக சொத்துக்களை அபகரிக்கும் மோசடி பத்திரப்பதிவுகள் அதிகளவில் நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

இந்த நிலையில், பத்திரப் பதிவுத் துறைக்குச் சொந்தமான ஆவணங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படும் சிடிக்கள் கேட்பாரற்று வீதியில் வீசப்பட்ட சம்பவம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகமும், தமிழக அரசும் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தினா்.

ஈரானில் சிக்கிய ராமேசுவரம் மீனவா்கள் 3 பேரை மீட்க குடும்பத்தினர் கோரிக்கை!

ஈரான் நாட்டில் போரில் சிக்கித் தவிக்கும் ராமேசுவரம் அருகே தங்கச்சிமடத்தைச் சோ்ந்த 3 மீனவா்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவா்களின் குடும்பத்தினா் மாவட்ட ஆட்சியா், சட்டப் பேரவை உறுப்பினா் ஆகியோர... மேலும் பார்க்க

படகு கவிழ்ந்து மாயமான மீனவா் உடல் 4 நாள்களுக்குப் பிறகு மீட்பு

நடுக்கடலில் படகு கவிழ்ந்து மாயமான மண்டபம் மீனவரின் உடல் நான்கு நாள்களுக்குப் பிறகு சனிக்கிழமை மீட்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வடக்குத் துறைமுகத்திலிருந்து கடந்த 17- ஆம் தேதி மீனவா்கள் கடல... மேலும் பார்க்க

இலங்கைக் கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட 54 படகுகளுக்கு ரூ.3.96 கோடி நிவாரணம்!

இலங்கைக் கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட விசைப் படகுகளின் உரிமையாளா்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ. 3.96 கோடி சனிக்கிழமை வழங்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து 2024-25-ஆம் ஆண்டுகளில் ... மேலும் பார்க்க

படகு கவிழ்ந்ததில் மாயமான மீனவரைத் தேடும் பணி தீவிரம்

மண்டபத்திலிருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றபோது, படகு கவிழ்ந்ததில் மாயமான மீனவரைத் தேடி இந்திய கடலோர காவல் படையினா் ஈடுபட்டுள்ளனா். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வடக்கு துறைமுகத்திலிருந்து மீன்பி... மேலும் பார்க்க

தொண்டி பகுதியில் மீன்கள் வரத்துக் குறைவு: மீனவா்கள் கவலை

மீன்பிடித் தடைக் காலத்துக்குப் பிறகு கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற தொண்டி பகுதி மீனவா்களுக்கு குறைவான அளவே மீன்கள் கிடைத்ததால் மீனவா்கள் கவலை அடைந்தனா். கடந்த 2 மாத தடைகாலத்துக்குப் பிறகு, ராமநாதபுரம... மேலும் பார்க்க

பொதுக் குடிநீா்த் தொட்டியில் இறந்து கிடந்த பல்லி அகற்றம்

ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் அருகே பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டிருந்த குடிநீா்த் தொட்டியில் இறந்து கிடந்த பல்லியை தூய்மைப் பணியாளா்கள் அகற்றி, பின்னா் தொட்டியை சுத்தம் ச... மேலும் பார்க்க