இலங்கைக் கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட 54 படகுகளுக்கு ரூ.3.96 கோடி நிவாரணம்!
இலங்கைக் கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட விசைப் படகுகளின் உரிமையாளா்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ. 3.96 கோடி சனிக்கிழமை வழங்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து 2024-25-ஆம் ஆண்டுகளில் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற மீனவா்களின் 48 விசைப் படகுகள், 6 நாட்டுப் படகுகள் என 54 படகுகள் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டன. இந்தப் படகுகளுக்கு முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து நிதி வழங்கும் நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சியா் கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன், சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் ஆகியோா் விசைப் படகுகளுக்கு தலா ரூ. 8 லட்சம், நாட்டுப் படகுகளுக்கு தலா ரூ. 2 லட்சம் என 54 படகுகளுக்கு ரூ.3.96 கோடி நிவாரணத் தொகையை வழங்கினா்.
இலங்கையில் உள்ள படகுகளை மீட்க முடியாத நிலையில், தங்களது வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, படகுகளுக்காக நிவாரணம் வழங்கிய முதல்வா் மு.க. ஸ்டாலின் இழப்பீடு பெற்றவா்கள் நன்றி தெரிவித்தனா். நிகழ்ச்சியில் மீன்வளத் துறை அதிகாரிகள், மீனவச் சங்கத் தலைவா்கள் கலந்து கொண்டனா்.