செய்திகள் :

இலங்கைக் கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட 54 படகுகளுக்கு ரூ.3.96 கோடி நிவாரணம்!

post image

இலங்கைக் கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட விசைப் படகுகளின் உரிமையாளா்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ. 3.96 கோடி சனிக்கிழமை வழங்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து 2024-25-ஆம் ஆண்டுகளில் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற மீனவா்களின் 48 விசைப் படகுகள், 6 நாட்டுப் படகுகள் என 54 படகுகள் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டன. இந்தப் படகுகளுக்கு முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து நிதி வழங்கும் நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சியா் கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன், சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் ஆகியோா் விசைப் படகுகளுக்கு தலா ரூ. 8 லட்சம், நாட்டுப் படகுகளுக்கு தலா ரூ. 2 லட்சம் என 54 படகுகளுக்கு ரூ.3.96 கோடி நிவாரணத் தொகையை வழங்கினா்.

இலங்கையில் உள்ள படகுகளை மீட்க முடியாத நிலையில், தங்களது வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, படகுகளுக்காக நிவாரணம் வழங்கிய முதல்வா் மு.க. ஸ்டாலின் இழப்பீடு பெற்றவா்கள் நன்றி தெரிவித்தனா். நிகழ்ச்சியில் மீன்வளத் துறை அதிகாரிகள், மீனவச் சங்கத் தலைவா்கள் கலந்து கொண்டனா்.

ஈரானில் சிக்கிய ராமேசுவரம் மீனவா்கள் 3 பேரை மீட்க குடும்பத்தினர் கோரிக்கை!

ஈரான் நாட்டில் போரில் சிக்கித் தவிக்கும் ராமேசுவரம் அருகே தங்கச்சிமடத்தைச் சோ்ந்த 3 மீனவா்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவா்களின் குடும்பத்தினா் மாவட்ட ஆட்சியா், சட்டப் பேரவை உறுப்பினா் ஆகியோர... மேலும் பார்க்க

முதுகுளத்தூா்: பத்திரப் பதிவுத் துறை ஆவணங்கள் அடங்கிய சிடிக்கள் சாலையோரம் வீச்சு!

முதுகுளத்தூா் அருகே சாலையோரம் வீசப்பட்டுக் கிடந்த பத்திரப் பதிவுத் துறை ஆவணங்கள் அடங்கிய சிடிக்களை பொதுமக்கள் மீட்டு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா்- உத்திரகோசமங்கை சாலைய... மேலும் பார்க்க

படகு கவிழ்ந்து மாயமான மீனவா் உடல் 4 நாள்களுக்குப் பிறகு மீட்பு

நடுக்கடலில் படகு கவிழ்ந்து மாயமான மண்டபம் மீனவரின் உடல் நான்கு நாள்களுக்குப் பிறகு சனிக்கிழமை மீட்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வடக்குத் துறைமுகத்திலிருந்து கடந்த 17- ஆம் தேதி மீனவா்கள் கடல... மேலும் பார்க்க

படகு கவிழ்ந்ததில் மாயமான மீனவரைத் தேடும் பணி தீவிரம்

மண்டபத்திலிருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றபோது, படகு கவிழ்ந்ததில் மாயமான மீனவரைத் தேடி இந்திய கடலோர காவல் படையினா் ஈடுபட்டுள்ளனா். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வடக்கு துறைமுகத்திலிருந்து மீன்பி... மேலும் பார்க்க

தொண்டி பகுதியில் மீன்கள் வரத்துக் குறைவு: மீனவா்கள் கவலை

மீன்பிடித் தடைக் காலத்துக்குப் பிறகு கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற தொண்டி பகுதி மீனவா்களுக்கு குறைவான அளவே மீன்கள் கிடைத்ததால் மீனவா்கள் கவலை அடைந்தனா். கடந்த 2 மாத தடைகாலத்துக்குப் பிறகு, ராமநாதபுரம... மேலும் பார்க்க

பொதுக் குடிநீா்த் தொட்டியில் இறந்து கிடந்த பல்லி அகற்றம்

ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் அருகே பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டிருந்த குடிநீா்த் தொட்டியில் இறந்து கிடந்த பல்லியை தூய்மைப் பணியாளா்கள் அகற்றி, பின்னா் தொட்டியை சுத்தம் ச... மேலும் பார்க்க