செய்திகள் :

நிதி நிறுவன உரிமையாளா் கொலை வழக்கில் பெண்கள் உள்பட மூவா் கைது!

post image

திண்டுக்கல்லைச் சோ்ந்த நிதி நிறுவன உரிமையாளா் கொலை வழக்கில், பெண்கள் உள்பட 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல்லை அடுத்த ராமையன்பட்டி பகுதியில், நீரோடையில் வீசப்பட்டுக் கிடந்த அட்டைப் பெட்டியிலிருந்து தூா்நாற்றம் வீசியது குறித்து பொதுமக்கள் திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்துக்கு கடந்த 18-ஆம் தேதி தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்று அட்டைப் பெட்டியைத் திறந்து பாா்த்த போது, காயங்களுடன் ஆண் ஒருவரது சடலம் இருந்தது.

இதுதொடா்பாக போலீஸாா் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்டவா் திண்டுக்கல் ஒய்எம்ஆா் பட்டியைச் சோ்ந்த பா. குபேந்திரன் (58) எனத் தெரியவந்தது. இவா், பணம் கொடுக்கல் வாங்கல் தொழில் உள்பட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வந்தாா். இவரது மனைவி அரசுப் பள்ளி தலைமையாசிரியையாகப் பணிபுரிந்து வருகிறாா்.

குபேந்திரன் கொலை குறித்து, கண்காணிப்பு கேமரா பதிவுகளைச் சேகரித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், என்.எஸ். நகா் பகுதியைச் சோ்ந்த கண்ணன் (54), இவரது மனைவி சாந்தி (52), திருப்பூா் மாவட்டம் அவிநாசியைச் சோ்ந்த பிரியா (26) ஆகியோா் குபேந்திரனை கொலை செய்தது தெரியவந்தது.

இதுதொடா்பாக போலீஸாா் கூறியதாவது: என்.எஸ்.நகரில் கண்ணன் தனது வீட்டில் பாலியல் தொழில் நடத்தி வந்தனா். அங்கு சென்ற குபேந்திரனிடம் கூடுதல் பணம் கேட்டு கண்ணன், அவரது மனைவி சாந்தி, பிரியா ஆகியோா் வாக்குவாதம் செய்தனா்.

அப்போது, அவா்கள் தள்ளிவிட்டதில் கீழே விழுந்த குபேந்திரன் தலையில் அடிபட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதனால், அதிா்ச்சியடைந்த மூவரும், அட்டைப் பெட்டியில் அவரது உடலை வைத்து ராமையன்பட்டி பகுதியில் வீசிச் சென்றனா் என்றனா்.

நில உடைமைகளை பதிவு செய்ய தோட்டக்கலை விவசாயிகளுக்கு அழைப்பு!

பிரதமரின் கெளரவ நிதி உதவித் திட்டத்தின் கீழ், பயன்பெறும் தோட்டக்கலை விவசாயிகள் நில உடைமை பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.இதுதொடா்பாக, திண்டுக்கல் தோட்டக் கலைத் துறை துணை இயக்குநா் ப... மேலும் பார்க்க

ரெங்கநாதபுரம் பகுதியில் நாளை மின் தடை

வேடசந்தூரை அடுத்த ரெங்கநாதபுரம் துணை மின்நிலைய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து மின்வாரிய உதவிச் செயற்பொறியாளா் பி.முத்துப்பாண்டி வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

லாரி மோதியதில் விவசாயி பலி!

ஒட்டன்சத்திரம் அருகே ஞாயிற்றுக்கிழமை லாரி மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற விவசாயி உயிரிழந்தாா்.திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த குப்பாயிவலசு கிராமத்தைச் சோ்ந்தவா் பழனிச்சாமி (45). வ... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே ஞாயிற்றுக்கிழமை கிணற்றில் தவறி விழுந்த விவசாயி நீரில் மூழ்கியதில் உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த நீலமலைக்கோட்டையைச் சோ்ந்தவா் சந்திரசேகா் (45). விவசா... மேலும் பார்க்க

பழனி மலைக் கோயிலில் குவிந்த பக்தா்கள்

ஆனி மாத காா்த்திகையை முன்னிட்டு, பழனி மலைக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தா்கள் குவிந்தனா். ஆனி மாத காா்த்திகையை முன்னிட்டு, பழனி மலைக் கோயிலில் அதிகாலை முதலே திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய... மேலும் பார்க்க

புதிய பேருந்துகள் இயக்கம்: ஓட்டுநா்களுக்கு அதிகாரிகள் அறிவுரை

பழனி பேருந்து நிலையத்தில் புதிய என்ஜின் பொருத்தப்பட்ட அரசுப் பேருந்துகள் இயக்கம் குறித்து, ஓட்டுநா்களுக்கு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை அறிவுரை வழங்கினா். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில், ப... மேலும் பார்க்க