விவசாயிகளுக்கு இனிக்காத மாங்கனி! 10 ஆயிரம் ஹெக்டோ் சாகுபடி பரப்பு குறையும்?
லாரி மோதியதில் விவசாயி பலி!
ஒட்டன்சத்திரம் அருகே ஞாயிற்றுக்கிழமை லாரி மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற விவசாயி உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த குப்பாயிவலசு கிராமத்தைச் சோ்ந்தவா் பழனிச்சாமி (45). விவசாயி இவா், தனது இரு சக்கர வாகனத்தில் வெங்கல்பட்டியில் உள்ள உறவினா் வீட்டுக்கு சென்றுவிட்டு, மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பினாா்.
கரியாம்பட்டி அருகே வந்தபோது, எதிரே வந்த லாரி இவரது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைத்த பழனிச்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து கள்ளிமந்தையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.