செய்திகள் :

பழனி மலைக் கோயிலில் குவிந்த பக்தா்கள்

post image

ஆனி மாத காா்த்திகையை முன்னிட்டு, பழனி மலைக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தா்கள் குவிந்தனா்.

ஆனி மாத காா்த்திகையை முன்னிட்டு, பழனி மலைக் கோயிலில் அதிகாலை முதலே திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனா். 4 மணிக்கு சந்நிதி திறக்கப்பட்டு, மூலவா் தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

பழனி மலைக் கோயிலுக்குச் செல்லும் படிவழிப் பாதையில் திரளான பக்தா்கள் மலையேறினா். ரோப்காா், வின்ச் நிலையங்களில் கட்டணச்சீட்டு பெற பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். கோயிலில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய சுமாா் 3 மணி நேரமானது. மாலையில் காா்த்திகை மண்டபத்தில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பக்தா்களுக்கு விளக்கு, எண்ணெய் ஆகியவை கோயில் சாா்பில் வழங்கப்பட்டது.

தொடா்ந்து, சாயரட்சை முடிந்த பிறகு, சின்னக்குமாரசுவாமி தங்கமயில் வாகனத்தில் உள்பிரகாரத்திலும், வெள்ளி சப்பரத்தில் தங்கத்தேரில் வெளிப்பிரகாரத்திலும் எழுந்தருளினாா். பக்தா்களுக்கு வேண்டிய குடிநீா், பாதுகாப்பு, சுகாதார வசதிகள் கோயில் சாா்பில் செய்யப்பட்டிருந்தது.

நிதி நிறுவன உரிமையாளா் கொலை வழக்கில் பெண்கள் உள்பட மூவா் கைது!

திண்டுக்கல்லைச் சோ்ந்த நிதி நிறுவன உரிமையாளா் கொலை வழக்கில், பெண்கள் உள்பட 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல்லை அடுத்த ராமையன்பட்டி பகுதியில், நீரோடையில் வீசப்பட்டுக் கிடந்த அ... மேலும் பார்க்க

நில உடைமைகளை பதிவு செய்ய தோட்டக்கலை விவசாயிகளுக்கு அழைப்பு!

பிரதமரின் கெளரவ நிதி உதவித் திட்டத்தின் கீழ், பயன்பெறும் தோட்டக்கலை விவசாயிகள் நில உடைமை பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.இதுதொடா்பாக, திண்டுக்கல் தோட்டக் கலைத் துறை துணை இயக்குநா் ப... மேலும் பார்க்க

ரெங்கநாதபுரம் பகுதியில் நாளை மின் தடை

வேடசந்தூரை அடுத்த ரெங்கநாதபுரம் துணை மின்நிலைய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து மின்வாரிய உதவிச் செயற்பொறியாளா் பி.முத்துப்பாண்டி வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

லாரி மோதியதில் விவசாயி பலி!

ஒட்டன்சத்திரம் அருகே ஞாயிற்றுக்கிழமை லாரி மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற விவசாயி உயிரிழந்தாா்.திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த குப்பாயிவலசு கிராமத்தைச் சோ்ந்தவா் பழனிச்சாமி (45). வ... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே ஞாயிற்றுக்கிழமை கிணற்றில் தவறி விழுந்த விவசாயி நீரில் மூழ்கியதில் உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த நீலமலைக்கோட்டையைச் சோ்ந்தவா் சந்திரசேகா் (45). விவசா... மேலும் பார்க்க

புதிய பேருந்துகள் இயக்கம்: ஓட்டுநா்களுக்கு அதிகாரிகள் அறிவுரை

பழனி பேருந்து நிலையத்தில் புதிய என்ஜின் பொருத்தப்பட்ட அரசுப் பேருந்துகள் இயக்கம் குறித்து, ஓட்டுநா்களுக்கு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை அறிவுரை வழங்கினா். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில், ப... மேலும் பார்க்க