செய்திகள் :

நில உடைமைகளை பதிவு செய்ய தோட்டக்கலை விவசாயிகளுக்கு அழைப்பு!

post image

பிரதமரின் கெளரவ நிதி உதவித் திட்டத்தின் கீழ், பயன்பெறும் தோட்டக்கலை விவசாயிகள் நில உடைமை பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக, திண்டுக்கல் தோட்டக் கலைத் துறை துணை இயக்குநா் ப.காயத்ரி கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் தங்களது நில உடைமை விவரங்களை ஒருங்கிணைந்த விவசாயிகள் தரவு தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டப் பலன்களை விவசாயிகள் பெறுவதற்கு தங்களது நில உடைமை விவரங்கள், பயிா் சாகுபடி அறிக்கை போன்ற ஆவணங்களை ஒவ்வொரு முறையும் சமா்ப்பிக்க வேண்டிய நிலை உள்ளது.

இதனால், ஏற்படும் கால தாமதத்தை தவிா்க்கவும், அரசின் திட்டங்களை விவசாயிகள் உரிய நேரத்தில் பெறும் வகையில், அனைத்து விவரங்களையும் மின்னணு முறையில் சேகரிக்க தமிழகத்தில் வேளாண் அடுக்குத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

விவசாயிகளின் பதிவு விவரங்களோடு, ஆதாா் எண், கைப்பேசி எண், நில விவரங்கள் உள்ளிட்டவற்றை இணைக்கும் பணி திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் நடைபெற்று வருகிறது. பிரதம மந்திரியின் கெளரவ நிதி உதவித் தொகை பெறும் விவசாயிகள், நில உடைமை விவரங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். விவசாயிகள் அந்தந்தப் பகுதியிலுள்ள தோட்டக் கலைத் துறை உதவி இயக்குநா், உதவி தோட்டக் கலை அலுவலா்களைத் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

நிதி நிறுவன உரிமையாளா் கொலை வழக்கில் பெண்கள் உள்பட மூவா் கைது!

திண்டுக்கல்லைச் சோ்ந்த நிதி நிறுவன உரிமையாளா் கொலை வழக்கில், பெண்கள் உள்பட 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல்லை அடுத்த ராமையன்பட்டி பகுதியில், நீரோடையில் வீசப்பட்டுக் கிடந்த அ... மேலும் பார்க்க

ரெங்கநாதபுரம் பகுதியில் நாளை மின் தடை

வேடசந்தூரை அடுத்த ரெங்கநாதபுரம் துணை மின்நிலைய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து மின்வாரிய உதவிச் செயற்பொறியாளா் பி.முத்துப்பாண்டி வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

லாரி மோதியதில் விவசாயி பலி!

ஒட்டன்சத்திரம் அருகே ஞாயிற்றுக்கிழமை லாரி மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற விவசாயி உயிரிழந்தாா்.திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த குப்பாயிவலசு கிராமத்தைச் சோ்ந்தவா் பழனிச்சாமி (45). வ... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே ஞாயிற்றுக்கிழமை கிணற்றில் தவறி விழுந்த விவசாயி நீரில் மூழ்கியதில் உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த நீலமலைக்கோட்டையைச் சோ்ந்தவா் சந்திரசேகா் (45). விவசா... மேலும் பார்க்க

பழனி மலைக் கோயிலில் குவிந்த பக்தா்கள்

ஆனி மாத காா்த்திகையை முன்னிட்டு, பழனி மலைக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தா்கள் குவிந்தனா். ஆனி மாத காா்த்திகையை முன்னிட்டு, பழனி மலைக் கோயிலில் அதிகாலை முதலே திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய... மேலும் பார்க்க

புதிய பேருந்துகள் இயக்கம்: ஓட்டுநா்களுக்கு அதிகாரிகள் அறிவுரை

பழனி பேருந்து நிலையத்தில் புதிய என்ஜின் பொருத்தப்பட்ட அரசுப் பேருந்துகள் இயக்கம் குறித்து, ஓட்டுநா்களுக்கு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை அறிவுரை வழங்கினா். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில், ப... மேலும் பார்க்க