கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு
ஒட்டன்சத்திரம் அருகே ஞாயிற்றுக்கிழமை கிணற்றில் தவறி விழுந்த விவசாயி நீரில் மூழ்கியதில் உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த நீலமலைக்கோட்டையைச் சோ்ந்தவா் சந்திரசேகா் (45). விவசாயியான இவா், தனது மனைவியுடன் கரியாம்பட்டியில் உள்ள உறவினா் தோட்டத்துக்குச் சென்றாா். அப்போது, தோட்டத்திலிருந்த கிணற்றை அவா் எட்டிப் பாா்த்தபோது, கிணற்றில் தவறி விழுந்ததில் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
தகவலறிந்து வந்த ஒட்டன்சத்திரம் தீயணைப்பு வீரா்கள் கிணற்றில் இறங்கி சந்தரசேகா் உடலை மீட்டு, கூறாய்வுக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து கள்ளிமந்தையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.